பக்கம் எண் :

782யுத்த காண்டம் 

அமரர்  வந்து  உற்றார்  அன்றே - என்ற தொடர் இருவர்
போரில் தேவர் ஏன் வந்தனர் என்று நடந்ததை நுண்ணறிவுடன்
எண்ணிப்    பார்க்கும்    இராவணனின்   அறிவுத்   திறத்தை
வெளிப்படுத்துகிறது.   எந்நிலையிலும்  நுணுக்கமாக  நடந்ததை
எண்ணிப்   பார்க்கும்   மனத்திறம்   உடையவன்  இராவணன்.
சங்கம்-கூட்டம் கங்கம்-பருந்து அன்று, ஏ-அசைகள்.
 

(15)
 

7287.

'முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர்

ஆக,

கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன்

கிடைத்தவேனும்,

வளை அமை வரி வில் வாளி மெய் உற

வழங்கும்ஆயின்,

இளையவன்தனக்கும் ஆற்றாது, என் பெருஞ்

சேனை--நம்ப!

 

நம்ப- குல முதல்வ; முளை அமை திங்கள் சூடும் முக்கணான்
- பிறைச்  சந்திரனைத்  தலையில்  சூடிய மூன்று கண்களையுடைய
சிவபெருமானை;  முதல்வர் ஆக - முதலாகக்  கொண்டு; கிளை
அமை புவனம் மூன்றும்
- மேலும் மேலும் வளருந்தன்மை கொண்ட
மூன்று உலகத்திலுள்ள மக்களும்; வந்து உடன் கிடைத்த வேனும்
-  ஒரு   சேர   வந்து   பக்கத்   துணையாய்  நின்றாலும்; என்
பெருஞ்சேனை 
-  என்னுடைய  பெரிய  படை; வளை அமை
வரிவில் வாளி
- வளைதல் பொருந்திய கட்டமைந்த வில்லிலிருந்து
அம்புகளை; மெய்   உற  வழங்கும் ஆயின்-  உடலில் உறப்
பொருந்துமாறு   வெளிப்படுத்தினால்;    இளையவன்   தனக்கும்
ஆற்றாது
- இளையவனாகிய இலக்குவனின் ஆற்றலுக்கு முன் நிற்க
மாட்டாது.
  

கிளை - மென்மேல்  வளர்தல்.  கிடைத்தவேனும்  -  பக்கத்
துணையாயினும்.   சங்கரன்    கொடுத்த    வரமும்     வாளும்
பெற்றவனாதலால்   முக்கணானை   ஈண்டு  இராவணன் நினைவு
கூர்கிறான்.
 

(16)
 

7288.

'எறித்த போர் அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம்

எஞ்சப்

பறித்த போது, என்னை அந்தப் பரிபவம் முதுகில்

பற்றப்