பக்கம் எண் :

10யுத்த காண்டம் 

கொன்று விட்டது  என்றால்;  ஆண்மை  தான்  மாசுணாதோ  -
(உலகில்) வீர ஆண்மை குற்றப்படும் அல்லவா?

"ஒண்ணுதற் கோஓ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு"

என்ற  குறள்  இங்கு  ஒப்பு நோக்கத் தக்கது. (குறள் 1088). பேசுவார்
என்பது நோக்கி ஒருவர் என்ற பாடம் கொள்ளப்பெற்றது.

                                                 (13)

7645.

‘நோயினை நுகரவேயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி
நாய் உயிர் ஆகும் அன்றே, நாள் பல கழித்த காலை?
பாயிரம் உணர்ந்த நூலோர், "காமத்துப் பகுத்த பத்தி"-
ஆயிரம் அல்ல போன-"ஐ-இரண்டு" என்பர் பொய்யே.*

நுணங்கி     நின்று   உணங்கும்  ஆவி  -  குறைந்து  நின்று
வாட்டமுறுகின்ற  என்  உயிர்;  நோயினை நுகரவேயும் - காமநோயை
நுகர்ந்து  கொண்டிருக்கும் போதும்;  நாள்  பல  கழித்த  காலை  -
அந்நோயோடு  பல  நாளைக்   கழிக்கும்போது;  நாய் உயிர்  ஆகும்
அன்றே
- நாயின் உயிர் என்று இழித்துக் கூறப்படும்  நிலைக்கு  ஆள்
ஆகும்  அல்லவா? பாயிரம்  உணர்ந்த  நூலோர் - நூலின் வரலாறு
கூறும்  பாயிரப்  பகுதியை  ஓதி உணர்ந்த நூல் வல்லோர்;  காமத்துப்
பகுத்த  பத்தி  
-  காமப்பகுதியில் ஏற்படுத்திய  அவத்தை வரிசை;
இரண்டு   என்பர்  பொய்யே
 -  பத்து  என்று  கூறுவார்கள்  அது
பொய்யே;  ஆயிரம்  அல்லபோன - ஆயிரம் என்று கூற முடியாமல்
அதையும் கடந்து போயின.

இப்பாடல்  சாக்காடு  என்னும்  அவத்தையைக்  கூறுகிறது  என்பர்
வை.மு.கோ.  பாயிரம்  -  நூலின்  வரலாறு, காமத்துப்  பகுத்த  பத்தி.
காமப்  பகுதியில்  பகுத்த  அவத்தை  வரிசை.   ஐ - இரண்டு பத்து.
அவையாவன   காட்சி,   வேட்கை,  உள்ளுதல்,  மெலிதல்,  ஆக்கம்
செப்பல்,  நாணுவரையிறத்தல், நோக்குவ எல்லாம்  அவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன,

                                                 (14)

7646.

‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்!
                                       என்னைப்
பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் மானம் கொல்ல,