பக்கம் எண் :

100யுத்த காண்டம் 

என் போல்பவர் சொல்லுவது, எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர்?" என்று உரையா,

 

தன் போல்பவர் தானும் இலாத - தன்னை ஒத்தவர் யாவர் தானும்
இல்லாத; தனிப்பொன்  போல்  ஒளிர்  மேனியனை  -  சிறப்புடைய
பொன்போல்   ஒளி   விடுகிற  திருமேனியை  உடைய  (திருமாலை);
புகழோய்  - (அந்த மதுகைடபர்கள்) பார்த்துப் புகழுடையவனே; என்
போல்பவர்  சொல்லுவது
 -  எங்களைப்  போன்றவர் சொல்லுவதற்கு
உரித்தானது (யாதெனில்);  எண்  உடையார்  உன் போல்பவர் யார்
உளர்
- எண்ணி   மதிக்கத்தக்க   வலிமை   உடையார்   உன்னைப்
போன்றவர்  யாவர்   உளர்;  என  உரையா  -  என்று  கூறி;  இவ்
"என உரையா"  என்பது  71  ஆம்  பாடலில்  உள்ள  "சொல்லுதலும்"
என்றதனோடு இயையும்.
 

எண்    - புகழ், ஒளிர் மேனியன் - ஒளிரும் திருமேனியை உடைய
திருமால், உரையா  - செய்யா எனும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை
எச்சம்.
 

                                                  (69)
 

7796.‘"ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்;
இருவோமொடு நீ தனி இத்தனை நாள்
பொருவோமொடு நேர் பொருதாய்; புகழோய்!
தருவோம் நின் மனத்தது தந்தனமால்;

 

ஒருவோம்    உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் - (நாங்கள்)
ஒருவராகவே  ஏழு  உலகத்தையும்  உண்டு  உமிழக்  கூடிய வலிமை
உடையவராவோம்;   இருவோமொடு   -  (அப்படிப்பட்ட  தனித்தனி
வலிமை  வாய்ந்த  எங்கள்)  இருவருடனும்;  இத்தனை நாள் நீ தனி
பொருவோமொடு நேர் பொருதாய்
- இவ்வளவு காலமும் நீ தனியாகப்
பொருகின்ற  (எங்களோடு)  நேர் நின்று போர் செய்தாய்; புகழோய் -
புகழுக்கு  உரியவனே; நின்  மனத்தது  தருவோம் தந்தனமால் - (நீ)
உன்  மனத்தினால்  வேண்டும்  வேண்டுதலைத்  தருவோம்; தந்தோ
விட்டோம்.
 

தருவோம்     தந்தனம் - தாங்கள் விரைந்து தவறாது கொடுப்போம்
என்பதை   வற்புறுத்த   வந்தது.   காலவழுவமைதி.   தருவோம்  -
எதிர்காலம் தந்தனம் - இறந்தகாலம்.
 

                                                  (70)
 

7797.

‘"ஒல்லும்படி நல்லது உனக்கு உதவச்
சொல்லும்படி" என்று, அவர் சொல்லுதலும்,