| "வெல்லம்படி நும்மை விளம்பும்" எனக் கொல்லும்படியால் அரி கூறுதலும். |
நல்லது உனக்கு ஒல்லும்படி உதவச் - நன்மை உனக்கு ஏற்படும் படி உதவுவதற்காகச்; சொல்லும் படி என்று அவர் சொல்லுதலும் - சொல்லுக என்று அவர் சொல்லுதலும்; நும்மை வெல்லும் படி விளம்பும் என - உங்களை வெல்வதற்கான வழியைச் சொல்லுங்கள் என்று; கொல்லும்படியால் அரி கூறதலும் - (அவர்களைக்) கொல்லுவதற்காகத் திருமால் கூறிய உடனே. |
(71) |
| 7798. | ‘"இடையில் படுகிற்கிலம் யாம்; ஒரு நின் தொடையில் படுகிற்றும்" எனத் துணியா, "அடையச் செயகிற்றி; அது ஆணை" எனா, நடையில் படு நீதியர் நல்குதலும், |
நடையில் படு நீதியர் - ஒழுக்கம் தவறாத நீதி வழிப் பட்டவர்களாகிய (அந்த மதுகைடவர்); யாம் ஒரு நின் தொடையில் படுகிற்றும் - நாங்கள் ஒப்பற்ற உன்னுடைய தொடையில் இறக்க வல்லோம்; இடையில் படுகிற்கிலம் எனத் துணியா - வேறு இடத்தில் இறக்க மாட்டோம் என்று துணிந்து (சொல்லி); அடையச் செய்கிற்றி அது ஆணை எனா - (நீ எங்களை உன் தொடைக்குள்ளே) அடையும்படி செய்வாய், அது (நீ செய்யவேண்டிய) எங்களுடைய ஆணை என்று; நல்குதலும் - (மேலும்) கூறுதலும் (தொடர் அடுத்த பாடலில் முடியும்.) |
நடை - ஒழுக்கம், இடையில் படுகிற்கிலம் - வேறு இடத்தில் சாக மாட்டோம். |
(72) |
| 7799. | ‘விட்டான், உலகு யாவையும், மேலொடு கீழ், எட்டா ஒருவன் தன் இடந் தொடையை; ஒட்டாதவர் ஒன்றினர், ஊழ்வலியால் பட்டார்; இது பட்டது பண்டு ஒருநாள்.* |
எட்டா ஒருவன் - மன வாக்குகளுக்குத் கோசரமாகாது கடந்து நின்ற திருமால்; உலகு யாவையும் மேலொடு கீழ் - மேலும் கீழும் உள்ள எல்லா உலகங்களையும் (பொருந்தி நீண்டு செல்லுமாறு); தன் இடந்தொடையை விட்டான் - தனது இடத்தொடையை (நீள) விட்டான்; ஊழ் வலியால் - ஊழின் வலிமை |