பக்கம் எண் :

102யுத்த காண்டம் 

காரணமாக,;    ஒட்டாதவர் ஒன்றினர் பட்டார் - பகைவர்களான மது
கைடபர்கள்   அத்தொடையில்   அகப்பட்டுக்  கொண்டார்கள்;  இது
பட்டது பண்டு ஒருநாள்
- இது நிகழ்ந்தது முன் ஒரு காலத்தில்.
 

                                                  (73)
 

7800.‘தனி நாயகன், வன் கதை தன் கை கொளா,
நனி சாட, விழுந்தனர், நாள் உலவா;
பனியா மது மேதை படப் படர் மே-
தினி ஆனது, பூவுலகு எங்கணுமே.
 

தனி  நாயகன் - ஒப்பறு தலைவனாகிய (திருமால்); வன் கதை தன்
கை  கொளா
 - வலிய கதையைத் தன் கையில் கொண்டு; நனி சாட -
நன்றாக மோதி அடிக்க; நாள் உலவா விழுந்தனர் - வாழ்நாள் உலந்து
இறந்தனர்;  பூவுலகு  எங்கணுமே  -  (இந்த) பூமி முழுவதும்; பனியா
மதுமேதை  படப்
 -  நடுக்கம்  இல்லாத  மதுவினுடைய கொழுப்புப்
பட்டதால்;  படர்  மேதினி ஆனது - பரந்த மேதினி என்ற பெயரைப்
பெறலாயிற்று.
 

பனியால்     நடுங்காத மேதை - கொழுப்பு. மது என்பவனுடைய
உடம்பில்  உள்ள  ஏழுவகைத் தாதுக்களில் ஒன்றான மேதசு. மதுவின்
மேதை  பட்டதால்  இந்  நிலவுலகு  மேதினி  எனப் பெயர் பெற்றது
என்க.  கொளா  - செய்யா என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு வினை
எச்சம். நனிசாட - உரிச்சொல் தொடர்.
 

                                                  (74)
 

7801.‘விதியால், இவ் உகம்தனில், மெய் வலியால்
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால்;

கதிர்தான் நிகர் கைடவன் இக் கதிர் வேல்
அதிகாயன்; இது ஆக அறைந்தனெனால்.’
 

இவ்  உகம்  தனில் - இந்த யுகத்தில்;  மெய்  வலியால்   மது
ஆனவன்  எம்முன்
 - உடல் வலி மிக்க மது என்பவன் ஆகிய என்
அண்ணன் (கும்பகருணன்); விதியால் மடிந்தனனால் - ஊழ் வினையின்
வலிமையால்   இறந்து   பட்டான்;   கதிர்தான்  நிகர்  கைடவன்  -
கதிரவனை  ஒத்துச்  (சுட்டு  எரிக்கும்)  ஆற்றல்  உள்ள  கைடவன்;
இக்கதிர்  வேல்  அதிகாயன்  - இந்த ஒளி பொருந்திய வேல் ஏந்திய
அதிகாயனாவன்;   இது  ஆக  அறைந்தனெனால்  -  இச்செய்தியை
மனத்தில் படுமாறு கூறினேன்.