பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 105

7806.‘என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான்; இவன், "அன்னவள் சொல்

குன்றேன்" என ஏகிய கொள்கையினால்
நின்றான் உளன் ஆகி;-நெடுந் தகையாய்!
 

நெடுந்தகையாய்    - பெருமைப் பண்புள்ளவனே! என் தேவியை
வஞ்சனை செய்து  எழுவான்  அன்றே  முடிவான்
- என் தேவியை
வஞ்சனை    செய்து    எடுத்துச்   சென்ற   இராவணன்   அன்றே
இறந்திருப்பான்; இவன்   -   இந்த  இலக்குவன்; அன்னவள்  சொல்
குன்றேன்  என  ஏகிய  கொள்கையினால்
 - அந்தச் சீதையினுடைய
சொல்லை   மீற  மாட்டேன்  என்று  (பாதுகாத்த  இடத்தை  விட்டு)
வெளியேறியதனால்; உளன்  ஆகி  நின்றான்  -  (அந்த  இராவணன்
இதுவரையில்)  உயிர்  உள்ளவன்  ஆகி வாழ்ந்து நின்றான்; (இல்லை
எனின் இறந்திருப்பான் என்றவாறு.)
 

சீதை   இறப்பேன் என்று கூறிய (கம்ப. 3331) சொற்களைக் கேட்டுப்
பாதுகாவலை   விட்டு   இலக்குவன்  போனதால்  இராவணன்  உயிர்
பிழைத்தான். இல்லையாயின் இறந்து பட்டிருப்பான் என்றவாறு.
 

                                                  (80)
 

           வீடணனை உடன் சென்று போரைக் காண இராமன் ஏவுதல்
 

7807.‘ஏகாய், உடன் நீயும்; எதிர்த்துளனாம்
மாகாயன் நெடுந் தலை வாளியொடும்
ஆகாயம் அளந்து விழுந்ததனைக்
காகாதிகள் நுங்குதல் காணுதியால்.
 

உடன்    நீயும் ஏகாய் - இந்த இலக்குவனுடன் போர்க் களத்துக்கு
நீயும்  போவாய்; எதிர்த்துள்ளனாம் மாகாயன் நெடுந்தலை - இவனை
எதிர்த்துள்ளவன் ஆகிய அதிகாயனுடைய பெரிய தலை; வாளியொடும்
ஆகாயம்   அளந்து   விழுந்ததனை
  -  (எய்யப்பட்ட)  அம்போடு
ஆகாயத்தை  அளந்து  (பூமியில்)  விழுவதனை; காகாதிகள் நுங்குதல்
காணுதியால்
 -  காகம்  முதலிய  பறவைகள்  கொத்தி உண்பதனைக்
காண்பாய்.
 

நுங்குதல் - உண்ணுதல், ஆல் - அசை.
 

                                                  (81)
 

7808.‘நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே?
தீரக் கொடியாரொடு தேவர் பொரும்