| போரைக் கொடு வந்து புகுந்தது நாம் ஆரைக் கொடு வந்தது? அயர்த்தனையோ? |
நீரைக் கொடு நீர் எதிர் நிற்க ஒணுமோ - நீரைத் துணையெனக் கொண்டு நீரை எதிர்த்து நிற்க முடியுமா? தீரக் கொடியாரொடு - மிகக் கொடியவரான அரக்கர்களுடன்; தேவர் பொரும் போரைக் கொடு வந்து நாம் புகுந்தது - தேவர்களுக்காகச் செய்கிற போரைக் கைக்கொண்டு வந்து நாம் போர்க்களம் புகுந்தது; ஆரைக்கொடு வந்தது - யாரைக் துணையாகக் கொண்டு அமைந்தது; அயர்த்தனையோ - மனம் சலித்தனையோ? |
அரக்கராகிய நீரை அழித்து வற்றச் செய்யவல்லவன் இலக்குவன் என்றபடி. ஆரைக் கொடு வந்தது - அறம் தவிரப் பிற துணை இல்லை என்றபடி. கொடு, ஒணுமோ - இடைக்குறைகள். |
(82) |
| 7809. | சிவன்; அல்லன்எனில், திருவின் பெருமான்; அவன் அல்லன்எனில், புவி தந்தருளும் தவன்; அல்லன்எனில், தனியே வலியோன் இவன்; அல்லன்எனில், பிறர் யார் உளரோ? |
சிவன் அல்லன் எனில் - (இந்த அதிகாயனைக் கொல்வதற்கு உரியவர்) சிவபிரான் அல்லன் என்றால்; திருவின் பெருமான் அவன் அல்லன் எனின் - திருமகள் தலைவனாகிய திருமால் அல்லன் என்றால்; புவி தந்தருளும் தவன் அல்லன் எனில் - நிலவுலகைப் படைத்தவன் ஆகிய தவச் சிறப்புடைய பிரமதேவன் அல்லன் என்றால்; தனியே வலியோன் இவன் அல்லன் எனில் - தனிச்சிறப்புடைய வலிமை படைத்த இந்த இலக்குவன் அல்லன் என்றால்; பிறர் யார் உளர் - மற்றவர் எவர் தாம் உளர். |
சிவனும், மாலும், பிரமனும் தனி வலி இலக்குவனும் தவிர இவ்வதிகாயனைக் கொலற்கு உரியவர் யார் உளர் என்றவாறு. |
(83) |
| 7810. | ‘ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் வன் தானையர் வந்து வளைந்த எலாம் கொன்றான் இவன் அல்லது, கொண்டு உடனே நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ? |