ஒருங்கு உள ஆம் - (கும்பகருணன் உடன்) ஒருங்கு சேர்ந்து வந்து; ஒன்றாயிர வெள்ளம் வன் தானையர் வந்து விளைந்த எலாம் - ஒன்றாயிரம் வெள்ளம் வலிய படை வீரர்கள் (தன்னை) வளைத்துக் கொண்டபோது (அவர்கள்) எல்லாரையும்; கொன்றான் இவன் அல்லது - கொன்றவன் ஆகிய இந்த இலக்குவன் அல்லது; கொண்டு உடனே நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ - (எதிர்த்து) இவனுக்குத் துணையெனக் கொண்டு நின்றவர் பிறர் எவரும் இல்லை என்பதனை எண்ணினாயோ? |
கும்பகருணனுடன் வந்த பெரும் அரக்கர் படையை இலக்குவன் துணைவர் யாரும் இன்றி அழித்தான் என்க. |
(84) |
| 7811. | ‘கொல்வானும் இவன்; கொடியோரை எலாம் வெல்வானும் இவன்; அடல் விண்டு என ஒல்வானும் இவன்; உடனே ஒரு நீ செல்வாய்’ என ஏவுதல் செய்தனனால். |
கொடியோரை எலாம் - கொடிய அரக்கர்களை எல்லாம்; கொல்வானும் இவன் - கொல்லப் போகின்றவன் இந்த இலக்குவன்; வெல்வானும் இவன் - (அவ்வாறு கொன்று) வெற்றி பெறப் போகின்றவன் இந்த இலக்குவன்; அடல் விண்டு என ஒல்வானும் இவன் - வலிமை பொருந்திக் கொல்லும் தன்மை உள்ள திருமால் போல எதிர்த்துப் போர் செய்பவனும் இந்த இலக்குவன்; உடனே ஒரு நீ செல்வாய் என - எனவே விரைவாக ஒப்பற்ற நீ இவனுடனே செல்வாய் என்று; ஏவுதல் செய்தனனால் - இராமன் வீடணனை ஏவினான். |
அடல் - அழித்தல், கொடியோர் - வினையாலணையும் பெயர். ஆல் - அசை. |
(85) |
இலக்குவன் வீடணனுடன் போர்க்களம் புகுதல் |
| 7812. | அக் காலை இலக்குவன் ஆரியனை முக் காலும் வலம் கொடு, மூதுணர்வின் மிக்கான், அடல் வீடணன் மெய் தொடரப் புக்கான், அவன் வந்து புகுந்த களம். |