இது பழி பாவம் என்று பார்க்கிலை - நீ செய்ய விரும்பிய செயலால் பழிவரும் பாவம் வரும் என்று எண்ணிப் பார்த்தாய் அல்லை; பகரத் தக்க மொழி இவை அல்ல - உம் போன்றவர் சொல்லத்தக்க சொற்கள் இவை அல்ல; என்பது உணர்கிலை - என்பதை நீ அறிந்தாய் அல்லை; முறைமை நோக்காய் - யாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற முறையையும் எண்ணிப் பார்த்தாய் அல்லை; கிழிகிலை நெஞ்சம் - இவ்வாறு முறையற்ற செயல் செய்தும் முறையற்ற சொல்லைச் சொல்லியும் கூட உன் நெஞ்சம் கிழிந்து பிளவுபடவில்லை; வஞ்சக் கிளையொடும் - உன் வஞ்சனைக்கு உதவும் சுற்றத்தவருடன்; இன்று காறும் அழிகிலை - இன்று வரை நீ அழியவில்லை; என்ற போது - என்றால்; என் கற்பு என் ஆம் - என் கற்பின் வலிமை என்ன ஆகும்? அறம் தான் என் ஆம் - அறம் தான் என்னவாகும்? | வாய் வந்தன சொல்லி, மனம் உவந்தன செய்யும் நீ முறைமை நோக்காது செயல்படுகிறாய், உன் நெஞ்சு கிழிபட, உறவினர் அழிந்தால் அன்றோ என் கற்பு பயன் பெற்றதாகவும், அறம் உலகில் மேம்பட்டதாகவும் ஆகும் என்கிறாள் சீதை. | (19) | 7651. | ‘வான் உள அறத்தின் தோன்றும் சொல்வழி வாழு மண்ணின் ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள; உணர்வும் உண்டால்; தான் உள, பத்துப் பேழ் வாய், தகாதன உரைக்கத் தக்க, யான் உளென் கேட்க என்றால், என் சொலாய்? யாது செய்யாய்? | வான் உள - வானம் உளது; அறத்தின் தோன்றும் சொல் வழி - அறத்திற்கு உட்பட்டுத் தோன்றும் சொல்லின் படி; மண்ணின் வாழும் ஊன் உள - நிலவுலகில் வாழும் தசையால் போர்த்தி உள்ள; உடம்புக்கு எல்லாம் உயிர் உள - உடம்பு படைத்தவைகளுக்கு எல்லாம் உயிர் உள்ளன; உணர்வும் உண்டு - அவைகளுக்கு நல்லுணர்வும் உண்டு, (எனினும் அவை உன்னைப் போல் நடந்து கொள்வதும் பேசுவதும் இல்லை); தகாதன உரைக்கத்தக்க - உனக்குத் தகுதி இல்லாத சொற்களைச் சொல்லுவதற்கு; பத்துப் பேழ்வாய் தான் உள - பிளவுபட்ட |
|
|
|