பக்கம் எண் :

192யுத்த காண்டம் 

சென்றவன் தன்னை நோக்கி - தன்னை நோக்கிச் சென்றவனாகிய
(வந்தவனாகிய)  இடபனைப்   பார்த்து;  சிரித்து - வயமத்தன் எள்ளிச்
சிரித்து;  நீ சிறியை - நீ மிகச் சிறியவன்; உன்னை வென்று அவம் -
உன்னை வெல்லுதல்  வீண்;  உம்மை  எல்லாம்  விளிப்பெனோ  -
உங்களைப்    போன்ற    (சிறியவர்களை)    எல்லாம்    போருக்கு
அழைப்பேனோ (அழையேன் என்றபடி); விரிஞ்சன் தானே என்றவன்
-  பிரமதேவன்தான்  என்று சொல்லத்  தக்கவன்; எதிர்ந்த போதும் -
(என்னை)  எதிர்த்துவந்த  போதும்;  இன்று  இராவணன்  மகனை -
இப்போது   இராவணனது   மகனாகிய  அதிகாயனைக்;  கொன்றவன்
தன்னைக்   கொன்றே 
 -  கொன்றவனாகிய  இலக்குவன்  தன்னைக்
கொன்றபிறகே;  குரங்கின் மேல் கொதிப்பென்  - குரங்குகளின் மீது
சினம் பொங்கப் போரிடுவேன்; என்றான் -என்று கூறினான்.
 

அவம்   -   வீண்.  விரிஞ்சன்   -   பிரமன்;   இது  அநுமனைக்
குறிப்பிட்டுக் கூறியதாகக் கொள்வர் வை.மு.கோ.
 

                                                 (230)
 

7957.‘வாய்கொண்டு சொற்றற்கு  ஏற்ற வலி கொண்டு,  பலி உண்
                                       வாழ்க்கைப்
பேய் கொண்டு, வெல்ல வந்த பித்தனே! மிடுக்கைப் பேணி
நோய் கொண்டு மருந்து  செய்யா  ஒருவ!  நின் நோன்மை
                                          எல்லாம்
ஓய்கின்றாய்  காண்டி!’  என்னா,  உரைத்தனன்,  இடபன்
                                         ஒல்கான்.
 

வாய்  கொண்டு  -  வாயைக்  கொண்டு;  சொற்றற்கு  ஏற்ற  -
சொல்லுவதற்கு  ஏற்புடைய;  வலி கொண்டு - வலிமையைக் கொண்டு;
பலி   உண்வாழ்க்கை  -  பிறர்  தரும்  உணவை  உண்டு  வாழும்
வாழ்க்கையை  உடைய;  பேய் கொண்டு  வெல்ல வந்த பித்தனே -
பேய்களைக் கொண்டு வெற்றிபெற வந்த பித்தனே!; மிடுக்கைப் பேணி
-  (தன்)  வலிமையைப் புகழ்ந்து;  நோய் கொண்டு மருந்து செய்யா
ஒருவ 
 - நோயை (உடலில்) கொண்டிருந்தும்  (அதற்குத் தேவையான)
மருந்தைச்  செய்யமுடியாத  ஒருவனே!;  நின்  நோன்மை எல்லாம் -
உன்  வலிமை  எல்லாம்;  ஓய்கின்றாய்  - ஓயப் போகிறாய், காண்டி
(அதனைக்) காண்பாயாக; என்னா - என்று;  இடபன் - இடபன் என்ற
குரங்குத்    தலைவன்;    ஒல்கான்    உரைத்தனன்   -   தளர்ச்சி
அடையாதவனாய்க் கூறினான்.