| பசுங் கழல் கண்ண பேயும் பறந்தன, பரவை நோக்கி; விசும்பிடைச் செல்லும் காரின் தாரைபோல் நான்ற மெய்யான். |
அசும்புடைக் குருதி பாயும் ஆகத்தான் - ஊற்றுப் பெருக்கைப் போல் இரத்தம் (வெளியில்) கொட்டுகிற உடம்பை உடையவனாகிய (இடபன்); வேகத்தால்- விரைவோடு; அத் தசும்புடைக் கொடுத்தேர் தன்னை - அந்தக் கலசம் அமைந்த பெரிய தேர் தன்னை; தடக்கையால் எடுத்து வீச - தன் வலிய கையினால் எடுத்து வீசி எறிய; பசுங்கழல் கண்ண பேயும் - (அத்தேரில் பூட்டப்பட்டிருந்த) பசுமையான கழற்சிக் காய் போன்ற கண்களை உடைய (ஆயிரம்) பேய்களும்; பரவை நோக்கிப் பறந்தன - கடலை நோக்கிப் பறந்து சென்றன; விசும்பிடைச் செல்லும் காரின் தாரை போல்-(அத்தேரின் மேல் இருந்த வயமத்தன்) விண்ணில் செல்லும் மேக ஒழுங்கு போல்; நான்ற மெய்யான் - தொங்குகின்ற உடலை உடையவன் ஆனான். |
அசும்பு - ஊற்றுப் பெருக்கு, தசும்பு - மிடா. ஈண்டுத் தேர்க் கவசம் என்க. பசுங்கழல்கண் - பசிய கழற்சிக்காய் போலும் கண். பேயின் கண்களுக்குக் கழற்சிக்காயினை உவமை கூறுதல் மரபு. பரவை - கடல். கார் - மேகம், தாரை - ஒழுங்கு, நாலுதல் - (ஞாலுதல்) தொங்குதல். ஞாலம் என்ற பெயர் இதனால் வந்தது என்பர். நாணுட்டுச் செத்தான் என்ற பேச்சு வழக்கையும் எண்ணுக. |
(233) |
7960. | தேரொடும் கடலின் வீழ்ந்து, சிலையும் தன் தலையும் எல்லாம் நீரிடை அழுந்தி, பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் பாரிடைக் குதியாமுன்னம்,, இடபனும், ‘பதக! நீ போய் ஆரிடைப் புகுதி!’ என்னா, அந்தரத்து ஆர்த்துச் சென்றான். |
தேரொடும் - தேருடன்; கடலின் வீழ்ந்து - கடலில் விழுந்து; சிலையும் - வில்லும்; தன்தலையும் எல்லாம் - தன் தலையும் (பிற) எல்லாமும்; நீரிடை அழுந்தி - கடல் நீரிலே அழுந்தி; பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் - மறுபடியும் பெருஞ்சினத்தோடு |