பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 195

மேல்     எழுந்து   வந்தவனாகிய  வயமத்தன்;   பாரிடைக்  குதியா
முன்னம்
 -  நிலத்தில்  குதிப்பதற்கு  முன்பே;   இடபனும் - இடபன்
என்பவனும்;  பதக  -  பாதகனே;  நீ  போய்  -  நீ  விலகிப் போய்;
ஆரிடைப் புகுதி - எங்கு (சென்று தப்பிப்) புகுவாய்; என்னா - என்று
சொல்லிக்கொண்டு;  அந்தரத்து  ஆர்த்துச்  சென்றான் - விண்ணில்
பேரொலி செய்து கொண்டு சென்றான்.
 

நெருப்பு  -  ஈண்டுச்சினம்.  அந்தரம் - இடம், இங்கே விண்எனவும்
போர்க்களம் எனவும் கொள்ளலாம். பதகன் - பாதகன்.
 

                                                 (234)
 

7961.அல்லினைத் தழுவி நின்ற பகல் என, அரக்கன் தன்னை,
கல்லினும் வலிய தோளால், கட்டியிட்டு இறுக்கும் காலை,
பல்லுடைப் பில வாயூடு பசும் பெருங் குருதி பாய,
வில்லுடை மேகம் என்ன, விழுந்தனன், உயிர் விண் செல்ல.

 

அல்லினைத் தழுவி நின்ற பகல் என - இரவினைத் தழுவி நின்ற
பகல் போல; அரக்கன்  தன்னை - அரக்கனாகிய வயமத்தன் தன்னை;
கல்லினும்   வலிய   தோளால் -  (இடபன்  தன்னுடைய)  கல்லைக்
காட்டிலும்  வலிமையுள்ள  தோள்களால்; கட்டியிட்டு - கட்டிப்பிடித்து;
இறுக்கும் காலை - இறுக்கமாய் நெருக்கிய பொழுது; பல்லுடைப் பில
வாயூடு
 -  பல்பொருந்திய  குகை  போன்ற  வாயின் வழியாக; பசும்
பெருங்குருதிபாய
- பசிய மிகுதியான உதிரம் வெளிப்பட; உயிர் விண்
செல்ல
 -  உயிர்  வானுலகம்  செல்ல;  வில்லுடை  மேகம் என்ன -
வில்லை உடைய மேகம் போல; விழுந்தனன் - நிலத்தில் விழுந்தான்;
 

அல்     - இரவு. அல்லினைத் தழுவி நின்ற பகல் - வயமத்தனைத்
தழுவி  நின்ற  இடபன்.  பிலம்  - குகை. பசுங்குருதி புதிய இரத்தம்.
வில்லுடை மேகம் - வயமத்தன்.
 

                                                (235)
 

                                       சுக்ரீவன் கும்பன் போர்
 

7962.குரங்கினுக்கு   அரசும்,   வென்றிக்  கும்பனும்,  குறித்த
                                     வெம் போர்
அரங்கினுக்கு அழகு செய்ய, ஆயிரம் சாரி போந்தார்,