| மரம் கொடும், தண்டு கொண்டும், மலை என மலையாநின்றார்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர், கண்ட தேவர். | குரங்கினுக்கு அரசும் - குரங்குகளுக்கு அரசனாகிய சுக்ரீவனும்; வென்றிக்கும்பனும் - வெற்றி உடைய கும்பன் என்னும் (அரக்கர் தலைவனும்); குறித்த வெம்போர் - (அங்குக்)குறித்துச் செய்த கொடியபோர்; அரங்கினுக்கு அழகுசெய்ய - அப்போர்க் களத்திற்கு அழகினைச் செய்ய; ஆயிரம் சாரி போந்தார் - ஆயிரம் முறை (என்னும் அளவு) வலசாரி, இடசாரியாகச் சுற்றிச் சுற்றிவந்தார்கள்; மரம்கொடும் - (அவர்கள்) மரத்தைக் கொண்டும்; தண்டுகொண்டும்- தண்டாயுதம் கொண்டும்; மலைஎன மலையாநின்றார் - இருமலைகள் போரிடுவது போல் போரிட்டார்கள்; கண்டதேவர் - அச்செயலைக்கண்ட தேவர்கள்; சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் - தலையும் கைகளும் எல்லாம் நடுங்கினர். | கும்பன் - கும்பகருணன் மக்கள் இருவரில் ஒருவன், மற்றொருவன் நிகும்பன். அரங்கு - போர்க்களம், சாரிபோதல் - இடவலமாகத்திரிதல். | (236) | கலிவிருத்தம் | 7963. | கிடைத்தார், உடலில் கிழி சோரியை வாரித் துடைத்தார், விழியில் தழல் மாரி சொரிந்தார், உடைத் தாரொடு பைங் கழல் ஆர்ப்ப உலாவிப் புடைத்தார், பொருகின்றனர்-கோள் அரி போல்வார். | கோளரி போல்வார் - வலிமையான சிங்கத்தைப் போன்றவர்களான (சுக்ரீவ கும்பர்கள்); கிடைத்தார் - ஒருவரை ஒருவர் நெருங்கியவர்களாய்; உடலில் கிழி சோரியை வாரித்துடைத்தார் - உடலில் கிழிசல் (ஏற்பட்டு அதிலிருந்து) பெருகிவருகிற இரத்தத்தை வாரித்துடைத்தார்கள்; விழியில் தழல் மாரி சொரிந்தார் - கண்களில் நெருப்பு மழையைப் பொழிந்தார்கள்; உடைத்தாரொடு - அணிந்துள்ள மாலையோடு; பைங்கழல் ஆர்ப்ப - பசும்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள் ஒலிக்க; உலாவிப் புடைத்தார் - இங்கும் அங்கும் நகர்ந்து |
|
|
|