பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 197

அடித்துக் கொண்டவர்களாய்ப்; பொருகின்றனர் - போர்செய்கின்றனர்,

                                                 (237)

7964.தண்டம் கையில் வீசிய தக்க அரக்கன்,
அண்டங்கள் வெடிப்பன என்ன, அடித்தான்;
கண்டு, அங்கு, அது மா மரமே கொடு காத்தான்;
விண்டு அங்கு அது தீர்ந்தது; மன்னன் வெகுண்டான்;

தண்டம்     கையின் வீசிய - தண்டாயுதத்தைக் கையில் எடுத்துச்
சுழற்றிய;    தக்க   அரக்கன்   -   (போர்த்தொழில்)   தகுதியுள்ள
அரக்கனாகிய கும்பன்; அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் -
அண்டங்கள்  எல்லாம் வெடிக்கின்றன என்று கண்டோர் எண்ணும்படி
பேரொலி   எழச்  (சுக்ரீவனை)  அடித்தான்;  அங்கு  அதுகண்டு  -
அப்போது  அந்தச்  செயலைக்கண்டு;  மாமரமே  கொடு காத்தான் -
(சுக்ரீவன்)  பெரியமரத்தைக்  கொண்டு  (அடி  தன்  மீது விழாதபடி)
காத்துக்  கொண்டான்;  அங்கு அது  விண்டு  தீர்ந்தது - அப்போது
அப்பெரியமரம்   துண்டாகி  அழிந்தது;  மன்னன்  வெகுண்டான்  -
(அதைக்கண்டு) மன்னனாகிய சுக்ரீவன் சினம் கொண்டான்.

                                                 (238)

7965.‘பொன்றப் பொருவேன், இனி’ என்று, பொறாதான்,
ஒன்றப் புகுகின்றது ஓர் காலம் உணர்ந்தான்,
நின்று அப் பெரியோன் நினையாதமுன், நீலன்
குன்று ஒப்பது ஓர் தண்டு கொணர்ந்து கொடுத்தான்.

பொறாதான்     - மனம் பொறுக்காதவன் ஆகிய சுக்ரீவன்; இனி -
இனி;  பொன்றப்  பொருவேன்  என்று  -  (நீ)  இறக்கும்படி  போர்
செய்வேன் என்று கூறி; ஒன்றப் புகுகின்றது - மும்முரமாய்ப் போரிடப்
போகின்ற; ஓர் காலம் உணர்ந்தான் - ஒரு காலத்தை எண்ணியவனாய்;
அப்பெரியோன்  நின்று  -  அந்தப் பெருமை மிக்க சுக்ரீவன் நின்று;
நினையாதமுன்  -  நினையாததற்கு  முன்பே; நீலன் - நீலன்; குன்று
ஒப்பது  ஓர் தண்டு 
  -   குன்றினை  ஒத்த  ஒப்பற்ற  தண்டாயுதம்
ஒன்றினைக்; கொணர்ந்து கொடுத்தான் - கொண்டு வந்து கொடுத்தான்.