7968. | தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன், தாளில் தடுமாறல் தவிர்ந்து, தகைந்தான், வாளிக் கடு வல் விசையால் எதிர் மண்டி, ஆளித் தெழில் அன்னவன் மார்பின் அறைந்தான். |
தோளில் புடையுண்டு - தோளில் அடியுண்டு; அயர் சூரியன் மைந்தன் - வருந்துகிற கதிரவன் மகனாகிய சுக்ரீவன்; தாளில் தடுமாறல் தவிர்ந்து - (அவனைக் கொல்லும்) தன் முயற்சியில் தடுமாறுதலைத் தவிர்த்து; வாளிக் கடுவல் விசையால் -அம்பு போன்ற கடுமையான அதிகவேகத்தோடு; எதிர் மண்டி தகைந்தான் - (அந்தக் கும்பனுக்கு) எதிரே சென்று நெருங்கி; ஆளித் தொழில் அன்னவன் - யாளியின் வீரம் போன்ற வீரத்தொழிலை உடைய (அக்கும்பனுடைய); மார்பின் அறைந்தான் - மார்பில் அறைந்தான். |
(242) |
7969. | அடி ஆயிர கோடியின் மேலும் அடித்தார்; ‘முடிவு ஆனவன் யார்?’ என, வானவர் மொய்த்தார்; இடியோடு இடி கிட்டியது என்ன, இரண்டும் பொடியாயின தண்டு; பொருந்தினர் புக்கார். |
ஆயிர கோடியின் மேலும் - ஆயிரம் கோடிக்கு மேலாக; அடி அடித்தார் - (தண்டாயுதத்தால்) அடிகளை அடித்துக் கொண்டார்கள்; வானவர் - தேவர்கள்; முடிவு ஆனவன் யார் என - (இவ்விருவரில்) முடிவு காலம் வந்து நெருங்கியவர் யாவர் என (அறிய); மொய்த்தார் - நெருங்கிச் சூழ்ந்தார்கள்; இரண்டும் தண்டு - இரண்டு தண்டுகளும்; இடியோடு இடி கிட்டியது என்ன - இடியோடு இடி மோதியது எனும்படி (மோதி); பொடியாயின - துகள்களாயின; பொருந்தினர் புக்கார் - (அவ்விருவரும்) நெருங்கினவர்களாகி; (மற்போரிடத்) தொடங்கினர். |
(243) |
7970. | மத்தச் சின மால் களிறு என்ன மலைந்தார்; பத்துத் திசையும் செவிடு எய்தின; பல் கால் தத்தித் தழுவி, திரள் தோள்கொடு தள்ளி, குத்தி, ‘தனிக் குத்து’ என, மார்பு கொடுத்தார். |
மத்தச்சினமால் களிறு என்ன மலைந்தார் - (சுக்ரீவன் கும்பன் ஆகிய இருவரும்) மதமும் சினமும் கொண்ட மயக்கமுள்ள களிறுகளைப் |