போல் போரிட்டார்கள்; பத்துத் திசையும் செவிடு எய்தின - (அதனால் ஏற்பட்ட ஓசையால்) பத்துத்திசைகளும் செவிடுபட்டன; பல்கால் தத்தித் தழுவி - பலமுறை பாய்ந்து தழுவி (நெருக்கியும்); திரள்தோள் கொடு தள்ளி - (தங்கள்) திரண்ட தோள்களைக் கொண்டு தள்ளியும்; குத்தி - (ஒருவரை ஒருவர்) குத்திக்கொண்டும்; தனிக்குத்துஎன - தனியாகக் குத்துவாய் என்று; மார்பு கொடுத்தார் - (அடுத்தவருக்கு) மார்பினைக் காட்டியவர்களாயும்; (போர் செய்தனர்.) |
(244) |
7971. | நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க, கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க, மலையின் பிளவுற்றது, தீயவன் மார்பம், |
நிலையில் - (மேலே சொன்னவாறு போர்) செய்யும் நிலையில்; சுடரோன் மகன் - கதிரவன் மகனாகிய சுக்ரீவனது; வன் கை நெருங்க - வலிமை உடைய கை நெருக்கிக்குத்தியதால்; கலையில் படு கம்மியர் - தமக்கு உரிய தொழிலை நன்கு பயின்றிருக்கும் கம்மியரது; கூடம் அலைப்ப - சம்மட்டி மோதுவதால்; உலையில் படு இரும்பென - உலைக்களத்தில் உள்ள இரும்பு போல; வன்மை ஒடுங்க - வலிமை கெட; தீயவன் மார்பம் - தீயவனாகிய (அந்தக் கும்பனுடைய) மார்பு; மலையின் பிளவுற்றது - மலைபிளவுபட்டதைப் போல பிளவுபட்டது. |
நெருங்க - கையைக் குவித்து நெருங்கிக் குத்தல் |
(245) |
7972. | ‘செய்வாய் இகல்?’ என்று அவன் நின்று சிரித்தான்; ஐ வாய் அரவம் முழை புக்கென, ஐயன் கை வாய் வழி சென்று, அவன் ஆர் உயிர் கக்க, பை வாய் நெடு நாவை முனிந்து பறித்தான். |
அவன் - (மார்பு பிளந்த நிலையிலும்) அந்தக் கும்பன்; இகல் செய்வாய் என்று - போர் செய்வாய் என்று கூறி; நின்று சிரித்தான் - நின்று கொண்டு சிரித்தான்; ஐயன் - தலைவனாகிய சுக்ரீவன்; ஐவாய் அரவம் முழை புக் கென - ஐவாய்ப் பாம்பு குகையில் புகுந்ததைப் போல; கை வாய் வழி சென்று - (தன்)கையை (அவனது) வாய்க்குள் செலுத்தி; அவன் ஆர் உயிர் கக்க - (அவன்) (தனது) அரிய உயிரை (வெளிக்)கக்கும்படியாக; பைவாய் நெடு |