பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 201

நாவை  -  பைபோன்ற  வாயில்  உள்ள  நீண்ட  நாக்கை;  முனிந்து
பறித்தான்
- சினந்து பிடுங்கினான்.
 

ஐவாய்  அரவம்  - பாம்பின்  சாதி  (அல்) வியப்புக்குரிய  பெரிய
வாயை உடைய மலைப்பாம்பு எனினுமாம்.
 

                                                 (246)
 

                   கும்பன் இறக்க, நிகும்பகை அங்கதன் எதிர்த்தல்
 

7973.அக்காலை, நிகும்பன், அனல் சொரி கண்ணன்,
புக்கான், ‘இனி, எங்கு அட போகுவது?’ என்னா,
மிக்கான் எதிர், அங்கதன் உற்று வெகுண்டான்;
எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார்.

 

அக்காலை   - அந்தப் பொழுது; நிகும்பன் - நிகும்பன் என்பவன்;
அனல்  சொரி  கண்ணன்  -  நெருப்பை  வெளிக்காலுகிற கண்களை
உடையவனாய்;  புக்கான் -  புகுந்தான்;  இனி எங்கு அட போகுவது
என்னா
  -   இனி    எங்கே   அட   போகப்   போகிறார்  என்று
சொல்லிக்கொண்டு   (வந்து);  எதிர்  மிக்கான்  -  சுக்ரீவன்  எதிரில்
செருக்கி  நின்றான்;  உற்று அங்கதன் வெகுண்டான் - (அவன் முன்)
நெருங்கி அங்கதன் சினந்து நின்றான்; எக்காலமும் இல்லது ஓர் பூசல்
இழைத்தார்
  -   (அவ்விருவரும்   எக்காலத்திலும்  (காண)  நிகழாத
(பெரும்) போரைத் (தொடங்கி) நிகழ்த்தினார்கள்.
 

                                                 (247)
 

7974.சூலப் படையானிடை வந்து தொடர்ந்தான்,
ஆலயத்தினும் வெய்யவன் அங்கதன், அங்கு ஓர்
தாலப் படை கைக் கொடு சென்று தடுத்தான்,
நீலக் கிரிமேல் நிமிர் பொற்கிரி நேர்வான்.

 

நீலக் கிரி மேல் நிமிர் பொற்கிரி தேர்வான்-நீலமலையின் மேல்
நிமிர்ந்து   செல்லும்  பொன்னால்   ஆகிய  மலை  போல்பவனாகிய;
ஆலத்திலும்  வெய்யவன் அங்கதன் - நஞ்சினும் கொடுமை உடைய
அங்கதன்; சூலப்படையானிடை வந்து தொடர்ந்தான்-சூலப்படையை
ஏந்தியவனான   (நிகும்பகை)   வந்து   தொடர்ந்து;  ஆங்கு  ஓர்  -
அப்பொழுது  ஒரு;  தாலப்  படைகைக் கொடு - பனைமரம் ஆகிய
படையைக்   (கைக்)   கொண்டு;   சென்று   தடுத்தான்  -  சென்று
(அவனைத்) தடுத்தான்.