தண்ணீர் தருக என்றனர் - தண்ணீர் தருக என்று கேட்டவர்கள்; தாவுற ஓடி - தண்ணீர் உள்ள இடத்தை நோக்கி ஓடி, உண் நீர் அற - நாக்கில் இருந்த நீர் முற்றும் வரண்டு விட; ஆவி உலந்தனர் உக்கார் - உயிர் வாடியவர்களாய் அழிந்தார்கள்; கண்ணீரொடும் - கண்ணீர்ப் பெருக்கோடு; ஆவி கலுழ்ந்தனர் - உயிருக்காக அழுதவர்கள்; காலால் மண் ஈரம் உற - காலின்வழிப் பெருகும் கண்ணீரினால் மண்ணில் ஈரம் மிக; கடிது ஊர்புக வந்தார் - விரைவாக ஊரின்கண் புக வந்தார்கள். |
தாவு - தண்ணீர் கிடைக்கும் பள்ளம். தண்ணீர்த்தாவு என்ற கொங்குப் பேச்சு வழக்கை எண்ணுக, |
(253) |
7980. | விண்மேல் நெடிது ஓடினர், ஆர் உயிர் விட்டார் மண்மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார்; எண் மேலும் நிமிர்ந்துளர், ஈருள் தயங்கப் புண் மேலுடை மேனியினார், திசை போனார். |
விண்மேல் நெடிது ஓடினர் - ஆகாயத்தின் மேல் நீண்ட தூரம் ஓடியவர்களாகி; ஆர் உயிர் விட்டார் - தங்களது அரிய உயிரை விட்டவர்களும்; மண் மேல் - நிலத்தின் மேல்; நெடுமால் வரை என்ன மறிந்தார் - உயர்ந்த பெரிய மலைகள் (விழுந்துள்ளன) என்னும்படி இறந்து கிடந்தவர்களும்; ஈருள் தயங்க - ஈரல் வெளியே தெரிய; புண் மேலுடை மேனியினார் - புண்கள் மிக்குடைய உடம்பினை உடையவராய்; திசை போனார் - திசைகளின் கண் ஓடிச் சென்றவர்களும்; எண் மேலும் நிமிர்ந்துளர் - எண்ணிக்கைக்கு அடங்காமல் மிகுந்துள்ளனர். |
நெடிது-நீண்ட தூரம், எண் - எண்ணிக்கை, ஈருள் தயங்குதல் - ஈரல் வெளியே தெரிதல், ஈருள் - ஈரல், |
(254) |
7981. | அறியும்மவர்தங்களை, ‘ஐய! இவ் அம்பைப் பறியும்’ என வந்து, பறித்தலும் ஆவி பிறியும் அவர் எண் இலர்; தம் மனை பெற்றார், குறியும் அறிகின்றிலர், சிந்தை குறைந்தார். |
அறியும் மவர் தங்களை - (தங்களுக்கு) அறிமுகமாகி இருப்பவர் தங்களை நோக்கி; ஐய - ஐயனே; இவ்அம்பைப் பறியும் என - இந்த அம்பை (உடலை விட்டுப்) பறித்து விடுங்கள் என்று சொல்ல; வந்து பறித்தலும் - (அவர்கள்) வந்து பறித்த உடனே; |