பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 205

ஆவி     பிறியும் அவர்  எண்  இலர் - உயிர்  பிரிந்த அவர்கள்
எண்ணிக்கை  இல்லாதவர்  ஆவர்;  தம்மனை  பெற்றார்  -  தங்கள்
வீட்டைச்  சென்று அடைந்தவர்கள்; குறியும் அறிகின்றிலர் - (அதன்)
அடையாளத்தையும்  அறியாதவர்களாய்; சிந்தை குறைந்தார் - மனம்
ஒடுங்கியவர்களும் (எண்ணிலர்) என்றபடி
 

எண்ணிலர்     என்பதை மத்திம தீபமாகக் கொண்டு, பிறியும் அவர்
எண்ணிலர்,  சிந்தை  குறைந்தார்  எண்ணிலர் எனக் கூட்டுக. குறியும்
அறியாமைக்குக்  காரணம்  அம்புகள்  உடம்பில் பட்டதால் ஏற்பட்ட
தளர்ச்சி.
 

                                                 (255)
 

7982.பரி பட்டு விழ, சிலர் நின்று பதைத்தார்;
கரி பட்டு உருள, சிலர் கால்கொடு சென்றார்;
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்,
எரி பட்ட மலைக்கண் இருந்தவர் என்ன,

 

பரிபட்டு    விழ - குதிரைகள் இறந்து விழுந்ததால்; சிலர் நின்று
பதைத்தார்
- சிலர் (தடுமாறி) நின்று பதைப்பு எய்தினார்கள்; கரிபட்டு
உருள
 -  யானைகள்  இறந்து  விழுந்து  உருண்டதனால்; சிலர் கால்
கொடு  சென்றார்
 -  சிலர்  காலினைக் கொண்டு ஓடிச் சென்றார்கள்;
எரிபட்ட   மலைக்கண்   இருந்தவர் என்ன -  நெருப்பில்  எரிந்த
மலையிடத்து   இருந்தவர்கள்   என்னும்படியாக;   நெரிபட்டு  அழி
தேரிடையே
- நெருக்கத்தினால் அழிந்து போன தேர்களின் இடையே;
பலர்நின்றார் - பல (அரக்கர்) நின்றார்கள்.
 

                                                 (256)
 

7983.மண்ணின் தலை வானர மேனியர் வந்தார்,
புண் நின்ற உடற் பொறையோர் சிலர் புக்கார்,
‘கண் நின்ற குரங்கு கலந்தன’ என்னா,
உள் நின்ற அரக்கர் மலைக்க, உலந்தார்.

 

மண்ணின் தலை-நிலத்திடத்தில்; புண் நின்ற உடற் பொறையோர்
- புண்பட்ட உடல் பாரம் உடையவர்களாகச் சிலர்; வானர மேனியர் -
சிலர்  குரங்கு  மேனி  உடையவர்களாக;  வந்தார்  புக்கார்  - வந்து
புகுந்தார்கள்;  கண்  நின்ற  குரங்கு  -  தங்கள்  கண் எதிரே நின்ற
குரங்கு(ப்   படைவீரர்)  கலந்தன  என்னா  -  தங்கள்  படையோடு
கலந்தன  என்று எண்ணி; உள் நின்ற அரக்கர் - (அரக்கர் படையின்)
உள்ளே இருந்த அரக்கர்கள்; மலைக்க -