(அவர்களோடு) போர் செய்ய; உலந்தார் - (அவ்வரக்கர்கள்) அழிந்தார்கள். |
(257) |
அறுசீர் ஆசிரிய விருத்தம் |
7984. | இரு கணும் திறந்து நோக்கி, அயல் இருந்து இரங்குகின்ற உருகு தம் காதலோரை, ‘உண்ணும் நீர் உதவும்’ என்றார், வருவதன் முன்னம் மாண்டார் சிலர்; சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே பட்டார்; சிலர் சிலர் பருகிப் பட்டார். |
இருகணும் திறந்து நோக்கி - தங்களது இரண்டு கண்களையும் திறந்து பார்த்து; அயல் இருந்து இரங்குகின்ற - அருகில் இருந்து (தங்களது நிலைக்கு) இரங்கி; உருகு தம் காதலோரை - மனமுருகுகிற (தங்களின்) அன்புக்கு இடமானவரைக் (கண்டு); உண்ணும் நீர் உதவும் என்றார் - (நீங்கள் எங்கட்கு) உண்பதற்கு உரிய நீரைத் தந்து உதவுங்கள் என்று கேட்டார்கள்; சிலர் வருவதன் முன்னம் மாண்டார் - (அவ்வாறு கேட்டவர்களில்) சிலர் (தண்ணீர்) கொண்டு வருவதற்கு முன்பே இறந்தார்கள். சிலர் வந்த தண்ணீர் பருகுவார் இடையே பட்டார் - சிலர் (கொண்டு) வந்த தண்ணீரை உண்டு நடுவில் இறந்து அழிந்தார்கள்; சிலர் சிலர் - மிகச் சிலரே தண்ணீரைப் பருகி இறந்தார்கள். |
(258) |
7985. | மக்களைச் சுமந்து செல்லும் தாதையர், வழியின் ஆவி உக்கனர் என்ன வீசி, தம்மைக் கொண்டு ஓடிப் போனார்; கக்கினர் குருதி வாயால், கண்மணி சிதற, காலால் திக்கொடு நெறியும் காணார், திரிந்து சென்று, உயிரும் தீர்ந்தார். |
மக்களைச் சுமந்து செல்லும் தாதையர் - (போரில் புண் பட்டு விழுந்த தம்) மக்களைச் சுமந்து செல்லுகின்ற தந்தையர்; வழியின் ஆவி உக்கனர் என்ன வீசி - (அம்மக்கள்) வழியில் உயிர் |