பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 207

துறந்தமையால்   (அவர்தம் உடலை) வீசிவிட்டுத்;  தம்மைக் கொண்டு
ஓடிப்  போனார்
 -  தங்களைக்  (காப்பாற்றிக்)  கொள்வதற்காக ஓடிப்
போய்;  வாயால்  குருதி கக்கினர் - (துன்பமிகுதியாலும் நெடுந் தூரம்
ஓடினமையாலும்)   வாயில்   இரத்தம்   கக்கிக்;  கண்மணி  சிதற  -
கண்ணின் மணிகள் தெறித்து விழுந்ததால்; திக்கொடு நெறியும் காணார்
-  திசையும்  செல்லும் வழியும் தெரியாதவர்களாகி, திரிந்து சென்று -
(காலால்)  தடவி  (வழிமாறிச்)  சென்று;  உயிரும்  தீர்ந்தார்  - உயிர்
விட்டார்கள்.
 

                                                 (259)
 

 அதிகாயனும் பிறரும் இறந்து பட்டமையை இராவணனுக்குத் தூதர் கூறல்
 

7986.இன்னது ஓர் தன்மை எய்தி, இராக்கதர் இரிந்து சிந்தி,
பொன் நகர் புக்கார்; இப்பால், பூசல் கண்டு ஓடிப் போன,
துன்ன அருந் தூதர் சென்றார், தொடு கழல் அரக்கர்க்கு
                                        எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார்,  மழையின்  நீர்  வழங்கு
                                       கண்ணார்.

 

இன்னது   ஓர் தன்மை எய்தி - இப்படிப் பட்ட ஒரு நிலைமையை
அடைந்து;  இராக்கதர்  இரிந்து  சிந்தி  - அரக்கர்கள் நிலைகெட்டுச்
சிதறி;   பொன்   நகர்   புக்கார்   - அழகிய  இலங்கை  நகரத்தை
அடைந்தார்கள்;  இப்பால்  -  இப்  பகுதியில்; பூசல் கண்டு - நடந்த
போரினைக் கண்டு; ஓடிப் போன - (அங்கு நடந்ததைக் கூறுவதற்காக)
ஓடிப்போன;   துன்ன   அருந்தூதர்   சென்று   -  நெருங்குவதற்கு
அருமையான தூதுவர்கள் சென்று; மழையின் நீர் வழங்கு கண்ணார் -
மழை  போல  நீர்  சொட்டுகிறகண்களை  உடையவராய்; தொடு கழல்
அரக்கர்க்கு   எல்லாம்   மன்னவன்
 -   வேலைப்பாடு   தோன்ற
அமைக்கப்பட்ட   வீரக்கழலை  அணிந்த  அரக்கர்களுக்கு  எல்லாம்
தலைவனாகிய இராவணனது; அடியில் வீழ்ந்தார் - அடிகளில் விழுந்து
வணங்கினர்.
 

இரிந்து  - நிலைகெட்டு,  பூசல் - போர். தொடுகழல் - வேலைப்பாடு
தொடுக்கப்பட்ட கழல்.
 

                                                 (260)