7987. | நோக்கிய இலங்கை வேந்தன், ‘உற்றது நுவல்மின்’ என்றான்; ‘போக்கிய சேனைதன்னில் புகுந்துள இறையும் போதா; ஆக்கிய போரின், ஐய! அதிகாயன் முதல்வர் ஆய கோக் குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர், ஆவி’ என்றார். | நோக்கிய இலங்கை வேந்தன் - (தூதர் காலில் விழுந்ததைப்) பார்த்த இலங்கைக்கு வேந்தனாகிய இராவணன்; உற்றது நுவல் மின் என்றார் - (நீர்) நடந்ததைச் சொல்லுங்கள் என்றான்; போக்கிய சேனை தன்னில் - (நீ) அனுப்பிய படைதன்னில்; புகுந்துள - திரும்பி நகருக்கு வந்துள்ளவை; இறையும் போதா - சிறிது என்று சொல்லுவதற்குக் கூடப் போதாது; ஐய - ஐயனே; ஆக்கிய போரின் - நடந்த போரில்; அதிகாயன் முதல்வர் ஆய - அதிகாயனைத் தலைவனாகக் கொண்ட; கோக்குலக்குமரர் எல்லாம் - அரசகுலத்துக் குமரர்கள் எல்லாம்; ஆவி கொடுத்தனர் என்றார் - உயிரைக் கொடுத்துவிட்டனர் என்று கூறினார்கள். | (261) | இராவணன் நிலையும் செயலும் | 7988. | ஏங்கிய விம்மல் மானம், இரங்கிய இரக்கம் வீரம், ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று தாங்கிய தரங்கம் ஆகக் கரையினைத் தள்ளித் தள்ளி, வாங்கிய கடல்போல் நின்றான்-அருவி நீர் வழங்கு கண்ணான். | அருவி நீர் வழங்கும் கண்ணான் - (கோக்குலக்குமரர் இறந்ததைக் கேள்விப்பட்டதால்) நீரருவி போன்று கண்ணீர் வெளிப்படுகின்ற கண்களை உடையவனாகிய இராவணன்; ஏங்கிய விம்மல் - ஏக்கம் கொள்ளக் காரணமாகிய; மானம் இரங்கிய இரக்கம் - மானமும் இரங்குகின்ற இரக்கமும்; ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை - மிக்க சினமும், துன்பமும் என்ற இவை,; ஒன்றற்கு ஒன்று - ஒன்றோடு ஒன்று; தாங்கிய தரங்கம் ஆக - மேலும் மேலும் தள்ளி வருகின்ற அலைபோல இருக்க; |
|
|
|