பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 209

கரையினைத்     தள்ளித் தள்ளி - (அவ்வலை) கரையளவு (வந்து)
தள்ளித்  தள்ளி;  வாங்கிய  -  பின்னால்  செல்லுகின்ற; கடல் போல்
நின்றான்
- கடல் போல் நின்றான்.
 

                                                 (262)
 

7989.திசையினை நோக்கும்; நின்ற தேவரை நோக்கும்; வந்த
வசையினை நோக்கும்; கொற்ற வாளினை நோக்கும்; பற்றிப்
பிசையுறும் கையை; மீசை கறுக்கொள உயிர்க்கும்; பேதை
நசையிடைக் கண்டான் என்ன, நகும், அழும், முனியும்,
                                         நாணும்.

 

திசையினை    நோக்கும்  -  (அதற்குப்  பின்னால்  இராவணன்)
திசைகளை  எல்லாம்  நோக்குவான்;  நின்ற  தேவரை  நோக்கும்  -
(தனக்குப்  பணிவிடை செய்து நின்ற)  தேவர்களை  நோக்குவான்; வந்த
வசையினை  நோக்கும்
- (தனக்கு) ஏற்பட்ட  பழியினை நோக்குவான்;
கொற்ற   வாளினை   நோக்கும் -  வெற்றி  பொருந்திய  வாளினை
நோக்குவான்;   கையைப்  பற்றிப்  பிசையுறும்  -  கையைப்  பற்றிப்
பிசைவான்; மீசை சுறுக்கொள உயிர்க்கும் - மீசை தீய்ந்து போகும்படி
பெருமூச்சு  விடுவான்;  நசையிடைப்  பேதை  கண்டான்  என்ன  -
விருப்பம்  மிகுதியால்  பேதமைக்  குணங்களை அடைந்தவன் போல;
நகும்  அழும்  முனியும்  நாணும் - நகுவான், அழுவான், முனிவான்,
நாணுவான்.
 

                                                 (263)
 

7990.மண்ணினை எடுக்க எண்ணும்; வானினை இடிக்க எண்ணும்;
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்;
‘பெண்   எனும்   பெயர  எல்லாம்  பிளப்பென்’  என்று
                                 எண்ணும்; எண்ணி,
புண்ணிடை எரி புக்கென்ன, மானத்தால் புழுங்கி நையும்.
 

மண்ணினை   எடுக்க   எண்ணும்  -   (மேலும்  இராவணன்) நிலவுலகை எடுக்க எண்ணுவான்; வானினை இடிக்க எண்ணும் -