பக்கம் எண் :

210யுத்த காண்டம் 

வானத்தை     இடிக்க நினைப்பான்; எண்ணிய உயிர்கள் எல்லாம் -
(உலகில்)  எண்ணிக்   கணக்கிடப்பட்டுள்ள  உயிர்கள்  அனைத்தையும்;
ஒரு   கணத்து  எற்ற  எண்ணும்  -  ஒருகண  நேரத்தில்  அழிக்க
எண்ணுவான்;  பெண்  எனும்  பெயர எல்லாம் பிளப்பென் - பெண்
என்ற   பெயரைக்   கொண்ட    பொருள்களை   எல்லாம்   பிளந்து
அழிப்பேன்;  என்று  எண்ணும்  -  என்று  நினைப்பான்;  எண்ணி -
அவ்வாறு  நினைத்து;  புண்ணிடை  எரிபுக்கென்ன  -  புண்ணில் தீப்
புகுந்தது  போல;  மானத்தால் புழுங்கி நையும் - மான உணர்வினால்
(மனம்) புழுங்கி வருந்துவான்.
 

தனக்குத்     துன்பம் வருகிற போது பெண்ணாசையை மறத்தலும்
வெறுத்தலும் செய்யும் இராவணன் பிறகு அதை மறந்தவனாகிக் காமப்
பித்துக் கொண்டு செயல்படுவதை எண்ணுக.
 

                                                 (264)
 

                    தானியமாலி இராவணன் அடி வீழ்ந்து அரற்றல்
 

7991.ஒருவரும் உரையார் வாயால், உயிர்த்திலர், உள்ளம் ஓய்வார்,
வெருவரும் தகையர் ஆகி, விம்மினர் இருந்த வேலை,
தரு வனம் அனைய தோளான்தன் எதிர் தானிமாலி
இரியலிட்டு அலறி, ஓயாப் பூசலிட்டு, ஏங்கி வந்தாள்;

 

ஒருவரும்     வாயால்    உரையார்    -    (இராவணனைச்
சூழ்ந்திருந்தவர்கள்)    ஒருவரும்    வாயால்   எதுவும்   பேசாமல்;
உயிர்த்திலர்  -  மூச்சுக்கூட  விடாதவர்களாய்;  உள்ளம்  ஓய்வார் -
மனம்  (தடுமாறி)  ஓய்ந்து;  வெரு வரும் தகையர் ஆகி - அஞ்சுகிற
தன்மை    உடையவர்களாகி;   விம்மினர்  இருந்த   வேலை    -
அழுதவர்களாய்  இருந்த  பொழுது;  தருவனம் அனைய தோளான் -
மரங்கள்  அடர்ந்த  வனம் போன்ற தோள்களை உடைய இராவணன்;
தன்  எதிர்  - தன் எதிரில்; தானிமாலி - தானிய மாலி (என்ற அவன்
மனைவி);  இரியலிட்டு  -  நிலைகெட்டு;  அலறி - அலறிக் கொண்டு;
ஓயாப் பூசலிட்டு - ஓயாத பேரொலி செய்து கொண்டு; ஏங்கி வந்தாள்
- அழுது கொண்டு வந்தாள்.
 

வெருவரல் -  அஞ்சுதல்,  இரியல் -  நிலைகெட்டு  ஓடல், பூசல் -
பேரொலி. உரையார், உயிர்த்திலர்.
 

                                                (265)