பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 211

7992.மலைக்   குவட்டு   இடி  வீழ்ந்தென்ன,  வளைகளோடு
                                   ஆரம் ஏங்க,
முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன
                                         வாயாள்;
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி,
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும்
                                        கண்ணாள்;
 

மலைக்   குவட்டு  இடி வீழ்ந்தென்ன -  (ஏங்கி  அரற்றி  வந்த
தானியமாலி)  மலை  உச்சியில்  இடி விழுந்தது போல; வளைகளோடு
ஆரம்  ஏங்க 
 -  (கையில் அணிந்துள்ள)  வளையல்களும் (கழுத்தில்
அணிந்துள்ள) ஆரமும்  ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையால் -
முலையாகிய  மலைமீது  மோதுகிற  கையை   உடையவளாய்;  முழை
திறந்தன்ன வாயாள்
- குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்;
தலைக்குவட்டு  அணைந்த  செக்கர் சரிந்தன  -  மேற்கு மலையில்
பொருந்திய  செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி -
சிவந்த  நிறமுடைய  கூந்தல்  அவிழ்ந்து  பரவ; உலைக்கு - உலைக்
களத்தின்  கண்;  வட்டு செம்பு உருகு ஒத்து - திரண்ட பொருளாகிய
செம்பு  உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் - குருதி நீர்
ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள்.
 

குவடு     - உச்சி, ஆரம் - கழுத்தாரம், முழை - குகை, செக்கர் -
செவ்வானம்,  தத்தி  -  பரந்து,  உலைக்கு  - உலைக்களத்தின் கண்,
வட்டு  -  திரண்ட  பொருள்,  முலைக்குவடு  உருவகம்,  உதிரநீர்  -
உருவகம்.
 

                                                 (266)
 

7993.வீழ்ந்தனள்  அரக்கன்   தாள்மேல்,  மென்மைத்  தோள்
                                 நிலத்தை மேவ;
போழ்ந்தனள்,   பெரும்பாம்பு   என்னப்   புரண்டனள்;
                                பொருமிப் பொங்கி,
‘சூழ்ந்தனை,    கொடியாய்!’    என்னா,  துடித்து, அருந்
                                 துயர வெள்ளத்து
ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும்
                                   அறிந்திலாதாள்;