7992. | மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன, வளைகளோடு ஆரம் ஏங்க, முலைக் குவட்டு எற்றும் கையாள்; முழை திறந்தன்ன வாயாள்; தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி, உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்; | மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன - (ஏங்கி அரற்றி வந்த தானியமாலி) மலை உச்சியில் இடி விழுந்தது போல; வளைகளோடு ஆரம் ஏங்க - (கையில் அணிந்துள்ள) வளையல்களும் (கழுத்தில் அணிந்துள்ள) ஆரமும் ஒலிக்க; முலைக் குவட்டு எற்றும் கையால் - முலையாகிய மலைமீது மோதுகிற கையை உடையவளாய்; முழை திறந்தன்ன வாயாள் - குகை திறந்தது போன்ற வாயை உடையவளாய்; தலைக்குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன - மேற்கு மலையில் பொருந்திய செவ்வானம் (கீழே) சரிந்தது போன்ற; குழல்கள் தத்தி - சிவந்த நிறமுடைய கூந்தல் அவிழ்ந்து பரவ; உலைக்கு - உலைக் களத்தின் கண்; வட்டு செம்பு உருகு ஒத்து - திரண்ட பொருளாகிய செம்பு உருகுவதை ஒத்து; உதிர நீர் ஒழுகும் கண்ணாள் - குருதி நீர் ஒழுகுகிற கண்களை உடையவள் ஆனாள். | குவடு - உச்சி, ஆரம் - கழுத்தாரம், முழை - குகை, செக்கர் - செவ்வானம், தத்தி - பரந்து, உலைக்கு - உலைக்களத்தின் கண், வட்டு - திரண்ட பொருள், முலைக்குவடு உருவகம், உதிரநீர் - உருவகம். | (266) | 7993. | வீழ்ந்தனள் அரக்கன் தாள்மேல், மென்மைத் தோள் நிலத்தை மேவ; போழ்ந்தனள், பெரும்பாம்பு என்னப் புரண்டனள்; பொருமிப் பொங்கி, ‘சூழ்ந்தனை, கொடியாய்!’ என்னா, துடித்து, அருந் துயர வெள்ளத்து ஆழ்ந்தனள், புலம்பலுற்றாள், அழக் கண்டும் அறிந்திலாதாள்; |
|
|
|