பக்கம் எண் :

212யுத்த காண்டம் 

அழக்கண்டும் அறிந்திலாதாள் - (இதுநாள்வரை பிறர்) அழுவதைப்
பார்த்து   இருந்தும்  துன்பத்தை   அறிந்திலாதவளாகிய   தானியமாலி;
மென்மைத்  தோள்  நிலத்தை  மேவ  - தன்  மெல்லிய தோள்கள்
நிலத்தைப்   பொருந்த;   அரக்கன்   தாள்  மேல்  வீழ்ந்தனள்  -
அரக்கனாகிய இராவணனது கால்களின் மீது விழுந்து;  போழ்ந்தனள் -
வாயைத்  திறந்து  கொண்டு;  பெரும் பாம்பு என்னப் புரண்டனள் -
(பெரிய) மலைப் பாம்பு போல (நிலத்தில்) புரண்டு; பொருமிப் பொங்கி
-   மனத்தில்  (துன்பப்)  பொருமல்  பொங்கி  (வர);  கொடியாய்  -
கொடியவனே;  சூழ்ந்தனை  என்ன  -  (எனக்குக்  கேடு) செய்தனை
என்று   கூறித்;   துடித்து   -   துடித்து;   அருந்துயர  வெள்ளத்து
ஆழ்ந்தனள் 
 -  கடத்தற்கரிய  துன்பமாகிய  வெள்ளத்தில் ஆழ்ந்து;
புலம்பலுற்றாள் - புலம்பத் தொடங்கினாள்.
 

அழக்     கண்டும் - தேவர் முதலிய இராவணன் பகைவர் அழக்
கண்டும்  என்க.  இவ்வாறு  கொண்டால்தான்,  இலங்கையின்  காட்சி
கண்ட அனுமன் கூறிய,
 

"அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகி
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன்

 

                                          (கம்ப. 4864)
 

என்ற     பாடலோடு முரணாகாமை அறிந்து கொண்டதாக ஆகும்
என்க.    தான்   அழாமையோடு   பிறர்   அழுவதைப்   பார்த்தும்
அறியாதவள்   எனப்   பொருள்   கோடல்   சிறப்பு.   மேவுதல்  -
பொருந்துதல், போழ்தல் - பிளத்தல்,
 

                                                (267)
 

கலிவிருத்தம்
 

7994.‘மாட்டாயோ, இக் காலம் வல்லோர் வலி தீர்க்க?
மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோள் ஆற்றல்?
கேட்டாய் உணர்ந்திலையோ? என் உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ?

 

இக்காலம் - இப்பொழுதே; வல்லோர் வலிதீர்க்க மாட்டாயோ -
(மகனைக்  கொன்ற) வலியவர்களின் வலிமையைத்  தீர்க்க மாட்டாயா?;
வீரம்  மீட்டாயோ  - வீரத்தை  மீண்டும் பெற்று விட்டாயா?; தோள்
ஆற்றல் மெலிந்தாயோ
- தோள் வலிமை