மெலிந்து விட்டாயா?; கேட்டாய் உணர்ந்திலையோ - (நான் கூறுவதைக்) கேட்டு உணரவில்லையா?; என் உரையும் கேளாயோ - (அல்லது) என் பேச்சை (நீ) (காது) கொடுத்துக் கேட்கமாட்டாயா?; என்னுடைய கண்மணியை - என்னுடைய கண்ணின் மணிபோன்ற (மகனைக்); காட்டாயோ காட்டாயோ - காட்டமாட்டாயா? காட்டமாட்டாயா? |
(268) |
7995.
| ‘"இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள்" என்று, அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் மந்தரத் தோள் என் மகனை மாட்டா மனிதன்தன் உந்து சிலைப் பகழிக்கு உண்ணக் கொடுத்தேனே! |
இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றாள் என்று-இந்திரனுக்கும் தோல்வியடையாத (வலிமையுள்ள) நல்ல மகனைப் பெற்றவள் என்று (சொல்லி); அந்தரத்து வாழ்வாரும் - வானத்தில் வாழுகின்ற தேவரும்; ஏத்தும் - புகழ்கின்ற; (புகழ்ச்சி பெற்ற நான்) அளியத்தேன் - இரங்கத்தக்கவளாய்; மந்தரத் தோள் என் மகனை - மந்தரமலை போன்ற தோள்களை உடைய என் மகனை; மாட்டா மனிதன் தன் - (வலிமையால் ஒப்பாக) மாட்டாத மனிதன் தன்னுடைய; உந்து சிலைப்பகழிக்கு - செலுத்தும் வில்லினது அம்புக்கு; உண்ணக் கொடுத்தேனே - உண்ணப் பலி கொடுத்தேனே. |
(269) |
7996. | ‘அக்கன் உலந்தான்; அதிகாயன்தான் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார்; மக்கள் இனி நின்று உளான், மண்டோதரி மகனே; திக்குவிசயம், இனி, ஒருகால் செய்யாயோ? |
அக்கன் உலந்தான் - முன்பு அனுமனால்) அக்ககுமாரன் அழிந்தான்; அதிகாயன் தான்பட்டான் - (இப்போது) அதிகாயன் தானும் பட்டான்; மிக்க திறத்து உள்ளார்கள் - மிக்க வலிமை உடையவர்கள்; எல்லாரும் வீடினார் - எல்லோரும் அழிந்தார்கள்; மக்கள் இனி நின்று உளான் - மக்களில் இனி (உயிருடன்) நின்றிருப்பவன்; மண்டோதரி மகனே - மண்டோதரி மகனாகிய (இந்திர சித்தன்) மட்டுமே; திக்கு விசயம் இனி - திக்கு விசயத்தை இனி; ஒருகால் செய்யாயோ - ஒரு முறை செய்து வரமாட்டாயா? |