மக்கள் துணையும் வீர உறவினர் துணையும் இழந்த நீ இனி ஒருமுறை திக்கு விசயம் செய்வது எவ்வாறு எனத் தானியமாலி வினவினள் என்க. "மக்கள் துணை அற்றனை (கம்ப. 8009) என்று இந்திரசித்தன் இராவணனை நோக்கிக் கூறுதலும் காண்க. உலத்தல் - அழிதல், திறம் - ஈண்டுவலிமை, வீடுதல் - அழிதல், திக்கு விசயம் - திசைதொறும் சென்று எதிர்த்தாரை வெல்லுதல், திக்கு விசயம் இனி ஒருகால் செய்யாயோ - நீயாவது திக்குவிசயம் செய்ய வரமாட்டாயோ என்று தன் மகனைக் கொன்றவரைப் பழிவாங்கத் தானியமாலி கூறுகிறாள் என்றும் கொள்ளலாம். |
(270) |
7997. | ‘ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய்’ எண் இறந்த கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ? பேதை ஆய்க் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ? சீதையால் இன்னம் வருவ சிலவேயோ? |
ஐயா ஏது சிந்தித்து இருக்கின்றாய் - (இராவணன் மௌனியாய் இருத்தல் கண்டு) ஐயா எதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றாய்; எண் இறந்த - எண்ணிக்கை கடந்த; கோதை ஆர் வேல் - மாலை பொருந்திய வேலை ஏந்திய; அரக்கர் பட்டாரைக் கூவாயோ - அரக்கர்களாகிய இறந்தவர்களை (உயிருடன் திரும்பிவரக்) கூப்பிடமாட்டாயோ?; பேதைஆய் - அறிவற்றுப்போய்க்; காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ - காமத்தைக் கைக்கொண்ட (நீ) உயிர் பிழைப்பாயோ?; இன்னும் -இன்னமும்; சீதையால்வருவ - சீதை காரணமாக வருந்துன்பங்கள்; சிலவேயோ - சிலதானோ (அன்று பல). |
(271) |
7998.
| ‘உம்பி, உணர்வுடையான், சொன்ன உரை கேளாய்; நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்; கும்பகருணனையும் கொல்வித்து, என் கோமகனை அம்புக்கு இரை ஆக்கி, ஆண்டாய் அரசு, ஐய!’ |
உணர்வுடையான் உம்பி - அறிவு உடையவனாகிய உன் தம்பி (வீடணன்); சொன்ன உரை கேளாய் - கூறிய சொற்களைக் கேளாதவனாயும்; நம்பி குலக்கிழவன் கூறும் - ஆடவரிற் சிறந்த குலத்தலைவனாகிய மாலியவான் கூறிய; நலம் ஓராய் - (சொற்களின்) நன்மையை எண்ணாதவனாயும்; கும்பகருணனையும் கொல்வித்து - (இருந்து) கும்பகருணனைப் (பகைவர் கையால்) கொல்வித்து; என் கோமகனை - என் சிறந்த மகனாகிய |