அதிகாயனை; அம்புக்கு இரை ஆக்கி - (பகைவர்) அம்புக்கு இரையாகக் கொடுத்து; ஐய - ஐயனே; அரசு ஆண்டாய் - அரசு புரிந்தாய். |
நல்லுரை கேளாது பகைவரிடம் கும்பகருணனையும், அதிகாயனையும் பலி கொடுத்து அரசாள்வாய் என்றபடி. ஐய அரசு ஆண்டாய் - இகழ்ச்சி குறித்து அன்னிய உணர்வு தோன்ற வந்தது. உணர்வு - ஈண்டு அறிவு. உம்பி - ஈண்டு வீடணனைக் குறித்தது. குலக்கிழவன் - குலத்தலைவனாகிய மாலியவான். |
(272) |
தானியமாலி அரண்மனை சேறல் |
7999. | என்று, பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து, கன்று படப் பதைத்த தாய்போல் கவல்வாளை, நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து, குன்று புரையும் நெடுங் கோயில் கொண்டு அணைந்தார். |
என்று - என்று; பலப்பலவும் - பலவற்றையும்; பன்னி - பலமுறை; எடுத்து அழைத்து - எடுத்துக்கூறி; கன்று படப்பதைத்த - கன்று உயிர் இழந்ததால் பதைப்பு எய்திய; தாய்போல் - தாய்ப் பசுவைப் போல்; கவல்வாளை - கலங்கி அழுகின்றவளாகிய தானியமாலியை; நின்ற உருப்பசியும் - (அங்கு அருகில்) நின்ற உருப்பசியும்; மேனகையும் - மேனகையும்; நேர்ந்து எடுத்து - நெருங்கி வந்து எடுத்து; குன்று புரையும் - குன்றினை ஒத்த; நெடுங்கோயில் - பெரிய அரண்மனைக்குக்; கொண்டு அணைந்தார் - கொண்டு சேர்த்தார்கள். |
(273) |
இலங்கையர் வருத்தம் |
8000. | தானை நகரத்துத் தளரத் தலைமயங்கி, போன மகவுடையார் எல்லாம் புலம்பினார்;- ஏனை மகளிர் நிலை என்ன ஆகும்?-போய் இரங்கி, வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார். |
நகரத்துத்தானை தளர - இலங்கை நகரத்தின்கண் (தங்கள்) சேனைகளின் தோல்வியைக் (கேள்விப்பட்டு); தலைமயங்கி - அரக்கர்கள் எல்லாரும் ஒன்று கூடி; போன மகவுடையார் - (போரில் இறந்து) போன மக்கள் உடையவர்கள்; எல்லாம் புலம்பினார் - |