பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 221

உன்     தம்பியரைக்; காலனும் உயிர் கொண்டான் - காலன் உயிர்
கொண்டான்;  கும்ப  நிகும்பரோடும்  -  கும்பன்  நிகும்பன்  என்ற
இருவருடன்; அதிகாயனும் - அதிகாயனும்; விண்தான் அடைந்தான் -
வானுலகத்தை அடைந்தான்; என்றான் - என்று கூறினான்.
 

இறை     ஆறிய நெஞ்சினன் - இராவணனுக்குத் துன்பம் எதுவும்
ஏற்படவில்லை   என்று   கண்டதால்   ஏற்பட்ட  ஆறிய  மனநிலை.
உம்பிமார் - தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்போர்.
 

                                                   (4)
 

8006.

சொல்லாத முன்னம், சுடரைச் சுடர் தூண்டு கண்ணான்,
பல்லால் அதரத்தை அதுக்கி, விண்மீது பார்த்தான்;
‘எல்லாரும் இறந்தனரோ!’ என ஏங்கி நைந்தான்;-
வில்லாளரை எண்ணின், விரற்கு முன் நிற்கும் வீரன்.

 

வில்லாளரை   எண்ணின் - வில் வீரர்களை எண்ணினால்;  முன்
விரற்கு   நிற்கும்   வீரன்
  -   முன்  விரலில்  நிற்கும்  வீரனாகிய
இந்திரசித்தன்;   சொல்லாத   முன்னம்   -   (தம்பியரின்  இறப்பை
இராவணன்)  சொல்லுவதற்கு  முன்னமேயே;  சுடரைக்  சுடர் தூண்டு
கண்ணான்
 -  தீயைக்  கூட  எரிக்கும்  தன்மை வாய்ந்த  கண்களை
உடையவனாகி;  பல்லால் அதரத்தை அதுக்கி - பற்களால் உதட்டைக்
கடித்து;  விண்மீது  பார்த்தான்  -  வானத்தின்  மேல் (அண்ணாந்து)
பார்த்தான்;   எல்லாரும்  இறந்தனரோ   -   எல்லோரும்   இறந்து
விட்டார்களோ?  என - என்று; ஏங்கி நைந்தான் - இரக்கம் கொண்டு
வருந்தினான்.
 

வில்லாளரை  எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் - வில்லாளரில்
முதல்வன்  என்றபடி, விண்மீது பார்த்தான் - தன்னால் வெல்லப்பட்ட
இந்திரனும்  பிற  தேவரும்  சிரிப்பரே என்பதற்காக விண் பார்த்தான்
என்க.
 

                                                   (5)
 

8007.

‘ஆர் கொன்றவர்?’ என்றலுமே, ‘அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன்; பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால், பிறரால்’ என, உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான்
                                   உரைத்தான்.