கொன்றவர் ஆர் என்றலும் - (ஏங்கி வருந்திய இந்திர சித்தன்இராவணனைப் பார்த்துக்) கொன்றவர் யாவர் என்று கேட்க; தார்கொன்றையினான் கிரி சாய்த்தவன்தான் - மார்பில் கொன்றை மாலைஅணிந்த சிவபிரானுடைய (கைலாய) மலையைப் பெயர்த்துச்சாய்த்தவானகிய இராவணன்; அதிகாயன் என்னும் பேர் கொன்றவன்- அதிகாயன் என்னும் பெயருடைவனைக் கொன்றவன்; வென்றிஇலக்குவன் - வெற்றி பொருந்திய இலக்குவன்; பின்பு நின்றார் -பின்பு நின்றவர்களாகிய கும்பநிகும்பர் முதலியோர்; ஊர்கொன்றவனால் பிறரால் - (இலங்கை) ஊரைத் தீயிட்டு அழித்தஅனுமனாலும் பிறராலும் (கொல்லப் பட்டனர்); என - என்று,; உற்றஎல்லாம் - நடந்ததை எல்லாம்; உரைத்தான் - கூறினான்.
(6)
‘கொன்றார் அவரோ? “கொலை சூழ்க!” என நீ கொடுத்தாய்; வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா! என்றானும் எனைச் செல ஏவலை; இற்றது’ என்னா, நின்றான், நெடிது உன்னி, முனிந்து, நெருப்பு உயிர்ப்பான்.
மன்னா - (இந்திரசித்தன் இராவணனைப் பார்த்து) அரசனே; வன்தானையர் - வலிமை உள்ள குரங்குப் படையை உடைய; மானிடர் -மனிதர்களாகிய (இராமலக்குவருடைய); வன்மை அறிந்தும் - போர்வலிமையை (நீ முதல் நாள் போரில்) அறிந்திருந்தும்; என்றானும் -(அவர்களோடு போரிட) என்ன காரணத்தாலோ; எனைச் செலஏவலை- என்னை போரிடச் செல் என்று ஏவவில்லை; கொன்றார் அவரோ -(என்னை ஏவாது அவர்களை அனுப்பியதால்) கொன்றவர்கள்அவர்களல்லர்; கொலை சூழ்க என - (இவர்களைக்) கொலைசெய்யுங்கள் என்று; நீ கொடுத்தாய் - நீயே (அவர்களிடம் அனுப்பிக்)கொடுத்தாய்; இற்றது என்னா - (அவர்கள் போரில் இறந்து பட்டதால்நம்முடைய வலிமை) குறைந்து விட்டது என்று; நெடிது உன்னி -நீண்ட நேரம் (அது பற்றி) நினைத்து; முனிந்து - சினம் கொண்டு;நெருப்பு உயிர்ப்பான் - நெருப்புப் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டு; நின்றான் - நின்றான்.