பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 223

அவர்கள்     இறந்ததற்குக்  காரணம்  உன்  பிழை  தான்  எனக்
கூறினான்  இந்திரசித்தன்  என்க.  மன்னா - தந்தை என விளிக்காது
மன்னா என விளித்ததாக அமைத்த நயம் காண்க.
 

                                                  (7)
 

8009.

‘அக்கப் பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை,
விக்கல் பொரு, வெவ் உரைத் தூதுவன் என்று விட்டாய்;
புக்கத் தலைப்பெய்தல் நினைந்திலை; புந்தி இல்லாய்!
மக்கள்-துணை அற்றனை; இற்றது உன் வாழ்க்கை மன்னோ!
 

அக்கப்     பெயரோனை  -  அக்க  குமாரன்  என்ற  பெயர்
கொண்டவனை;  நிலத்தொடு  அரைத்துளானை  - நிலத்தில் தேய்த்து
அழித்தவனாகிய   அனுமனை,  (நான்  பிரமக்  கணையால்  கட்டிக்
கொண்டு  வந்த  போது  கூட); விக்கல்பொரு - எச்சிலுக்குச் சமமான;
வெவ்  உரைத்தூதுவன் என்று - எதிரியின் விருப்பமான சொற்களைச்
சொல்லுகிற  தூதுவன் என்று சொல்லி; விட்டாய் - (கொல்லாது) விட்டு
விட்டாய்;   புக்கத் தலைப்  பெய்தல்  நினைந்திலை  -  (அவனை
விட்டதால்   நம்   பக்கச்  செய்திகள்)  எதிர்ப்  பக்கத்தில்  புகுந்து
நிறைதலை  நினைத்தாய்  இல்லை;  புந்தி இல்லாய் - அறிவு அழிந்து
போனவனே;  மக்கள்  துணை  அற்றனை - (இப்போது நீ) மக்களின்
துணையை இழந்து விட்டாய்; உன் வாழ்க்கை இற்றது மன்னோ - உன்
வாழ்க்கை அழிந்து விட்டது.
 

                                                   (8)
 

                                  இந்திர சித்தன் வஞ்சினம்
 

8010.

‘என், இன்று நினைந்தும், இயம்பியும் எண்ணியும்தான்?
கொன் நின்ற படைக்கலத்து எம்பியைக் கொன்றுளானை,
அந் நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால்,
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென்; வாழ்வும் வேண்டேன்.