பக்கம் எண் :

224யுத்த காண்டம் 

இன்று   - இப்பொழுது; நினைந்தும் - (நடந்தவற்றை) நினைத்தும்;
இயம்பியும் - (உன் மீது) குறை சொல்லியும்; எண்ணியும் தான் என் -
(பலவாறு பலவற்றை) எண்ணிப் பார்த்தும் தான் என்ன பயன்? கொன்
நின்ற   படைக்கலத்து  எம்பியைக்
 -  கொல்லும்  தொழில்  நின்ற
படைக்கலங்களை    ஏந்திய    என்   தம்பியாகிய   அதிகாயனைக்;
கொன்றுளானை - கொன்றுள்ளவனாகிய; அவன் யாக்கையை - அந்த
இலக்குவனுடைய  உடம்பை;  அந்நின்ற  நிலத்து  -  அவன்  நின்ற
போர்க்களத்தில்;  நீக்கி  அல்லால் - உயிர் பிரித்தல் இல்லாமல்; மன்
நின்ற நகர்க்கு
- நிலை பெறுந்தன்மை பொருந்தி நின்றுள்ள இலங்கை
நகருக்கு;  இனி   வாரலென்   -  இனி  வர  மாட்டேன்;  வாழ்வும்
வேண்டேன்
 -  (அதைச்  செய்யாமல்  போனால்  உயிர்)  வாழ்வும்
விரும்பேன்.
 

இலக்குவனைக்     கொன்றல்லது  நகர்க்கு  மீளேன்.  அவ்வாறு
செய்யேனானால்   உயிர்   வாழேன்   என்றவாறு.   இது  “இன்னது
பிழைப்பின்  இதுவாகியரெனக் கூறிய துன்னரும் துப்பின் வஞ்சினம்”
என்க. (தொல். பொருள் 77)
 

                                                  (9)
 

8011.

‘வெங் கண் நெடு வானரத் தானையை வீற்று வீற்றாய்ப்
பங்கம் உற நூறி, இலக்குவனைப் படேனேல்,
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத
செங் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க, என்னை!

 

வெங்கண  நெடுவானரத் தானையை - கொடிய கண்களை உடைய
பெரிய  வானரப்  படையை;  வீற்று  வீற்றாய்  - கூட்டம் கூட்டமாக;
பங்கம்   உற  நூறி  -  துண்டு  பட்டு  அழியும்படியாகச்  சிதைத்து;
இலக்குவனைப்  படேனேல்  -  (எம்பியைக் கொன்ற) இலக்குவனைப்
போரில் கொல்லாது விடுவேன் எனின்; அங்கம் தர அஞ்சி - (போரில்
புறங்கொடாது)  மார்பு  காட்டி  (நிற்பதற்கு)  பயந்து;  என்  ஆணை
கடக்கலாத
 -  என்  ஆணையை  மீற முடியாத; செங்கண் நெடுமால்
முதல்  தேவர்
 -  சிவந்த  கண்களை  உடைய திருமாலை முதலாகக்
கொண்ட   தேவர்கள்;   என்னைச்  சிரிக்க  -  என்னைப்  பார்த்து
நகைக்கட்டும்.
 

                                                  (10)
 

8012.

‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்தன்
ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,