| ஏற்றான் இகல் இந்திரன் ஈர்-இரு கால், எனக்கே தோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க’ என்றான். |
மாற்றா உயிர் எம்பியை - (பிறரால்) போக்க முடியாத உயிரை உடைய என் தம்பியாகிய (அதிகாயனை); மாற்றிய மானுடன் தன் - உயிர் வாங்கிய மனிதனாகிய (இலக்குவன்) தன்; ஊற்று ஆர் குருதிப் புனல் - ஊற்றுப் போல் நிறைந்து பெருகி வரும் இரத்த வெள்ளத்தைப்; பார்மகள் உண்டிலாளேல் - நிலமாகிய பெண் உண்ணாமல் போனால்; இகல் இந்திரன் - போராற்றல் மிக்க இந்திரன்; எனக்கே ஏற்றான் - என்னுடன் போர் ஏற்று; தோற்றான் தனக்கு - தோற்றவனாகிய (அவன்) தனக்கு; என் நெடுஞ் சேவகம் - என் பெருவலிமை; ஈர் இருகால் - நான்குமுறை; தோற்க - தோற்றது ஆகட்டும்; என்றான் - (என்று இந்திரசித்தன்) கூறினான். |
(11) |
8013. | ‘பாம்பின் தரு வெம் படை, பாசுபதத்தினோடும், தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி, ஓம்பித் திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல், சோம்பித் துறப்பென்; இனிச் சோறும் உவந்து வாழேன். |
பாம்பின் தருவெம்படை - பாம்பு வடிவில் அமைந்த கொடிய படையினையும்; பாசு பதத்தினோடும் - பாசு பதப்படையினையும்; தேம்பல் பிறை சென்னி வைத்தான் - குறைந்த கலையுடைய பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்தவனாகிய சிவபிரான்; தரு தெய்வஏதி - தந்த தெய்வத்தன்மை பொருந்திய வாட்படையினையும்; ஓம்பித் திரிந்தேன் எனக்கு - பாதுகாத்துத் திரிந்தவன் ஆகிய எனக்கு; இன்று உதவாது போமேல் - (அவை) இன்று உதவாமல் போகுமானால்; சோம்பித் துறப்பென் - (என் உயிரைச்) சோம்பல் அடைந்து விட்டு விடுவேன்; இனிச் சோறும் உவந்து வாழேன் - இனிமேல் சோற்றையும் விரும்பி வாழமாட்டேன்; |
பாம்பின் தரு வெம்படை - நாக அத்திரம், பாசுபதம் - பசுபதி தொடர்புடையது. பாசுபத அத்திரம் என்க. தேம்பல் பிறை - குறைந்த கலையினை உடைய பிறை, ஏதி - வாள். |
(12) |