8014. | ‘மருந்தே நிகர் எம்பிதன் ஆர் உயிர் வவ்வினானை விருந்தே என அந்தகற்கு ஈகிலென், வில்லும் ஏந்தி, பொரும் தேவர் குழாம் நகைசெய்திடப் போந்து, பாரின் இருந்தேன்எனின், நான் அவ் இராவணி அல்லென்’ என்றான். |
மருந்தே நிகர் எம்பிதன் - சாவா மருந்தைப் போன்ற என் தம்பியாகிய அதிகாயன் தன்; ஆர் உயிர் வவ்வினானை - அரிய உயிரைக் கவர்ந்தவன் ஆகிய (இலக்குவனை); அந்தகற்கு விருந்தே என ஈகிலென் - யமனுக்கு விருந்து என்று கொடுக்காமல்; பொரும் தேவர் குழாம் நகை செய்திட - (என்னுடன்) போரிடும் (பகைவர்களான) தேவர்களின் கூட்டம் (எள்ளி) நகை செய்திட; வில்லும் ஏந்தி - வில்லையும் (கையில்) ஏந்தி; நான் - நான்; பாரின் போந்து இருந்தேன் எனின் - நிலத்தில் பொருந்தி இருந்தேன் என்றால்; அவ் ‘இராவணி அல்லென் - அந்த இராவணனுடைய மகன் அல்லேன்; என்றான் - என்று (இந்திரசித்தன்) கூறினான். |
இராவணி - இராவணனுடைய மகன் இந்திரசித்து. |
(13) |
8015. | ‘ஏகா, இது செய்து, எனது இன்னலை நீக்கிடு; எந்தைக்கு ஆகாதனவும் உளவோ? எனக்கு ஆற்றலார்மேல் மா கால் வரி வெஞ் சிலையோடும் வளைத்த போது சேகு ஆகும் என்று எண்ணி, இவ்இன்னலின் சிந்தை செய்தேன்.’ |
ஏகா- (இராவணன் இந்திரசித்தனைப் பார்த்து நீ) ஏகி; இது செய்து - (இலக்குவனைக் கொல்வதாகிய) இதனைச் செய்து; எனது இன்னலை நீக்கிடு - எனது துன்பத்தைப் போக்கி விடுக; எந்தைக்கு ஆகாதனவும் உளவோ - எந்தை போன்றவனாகிய (உன்னால்) செய்ய முடியாத செயல்களும் உள்ளனவா (இல்லை என்றபடி); இவ் இன்னலின் - (எனக்கு ஏற்பட்ட) மக்களை இழத்தலாகிய துன்பக்காலத்தில்; எனக்கு - எனக்காக; ஆற்றலார் மேல் - (நீ) பகைவர் மேல் சென்று; மாகால் வரி வெஞ்சிலை யோடும் - பெரிய தண்டினை உடைய கட்டமைந்த கொடிய வில்லோடு கூட; வளைத்தபோது - (அவர்களை) வளைத்த |