பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 227

காலத்தில்;     சேகு ஆகும் என்று எண்ணி - (அச்செயல் எனக்கு)
உறுதியை  உண்டாக்கும் என்று எண்ணிப் பார்த்து; சிந்தை செய்தேன்
- (உன்னை அனுப்ப) மனதில் எண்ணினேன்.
 

இன்னல்   -   மக்களை  இழந்தமையும்,  பகைவர்  வென்றமையும்,
சீதையைப் பெறாமையுமாகிய இன்னல் என்க.
 

                                                  (14)
 

               இந்திரசித்தன் போர்க்கோலம் பூண்டு, களம் புகுதல்
 

8016.

என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,
ஒன்றானும் அறா, உருவா, உடற்காவலோடும்,
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,
வன் தாள் வயிரச் சிலை வாங்கினன்-வானை வென்றான்.

 

என்றானை   - என்று கூறிய இராவணனை; வானை வென்றான் -
வானுலகத்தில்    உள்ளவர்களை   வென்றவனாகிய   இந்திரசித்தன்;
வணங்கி  - வணங்கி; ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் -
ஒன்றினாலும்  அறுக்கவோ   (அ)  ஊடுருவிச்  செல்லவோ  முடியாத
கவசத்தோடு;  இலங்கு அயில்வாளும் ஆர்த்திட்டு - ஒளி விளங்குகிற
கூர்மையான  வாளையும் (இடையில்) அணிந்து கொண்டு; பொன் தாழ்
கணையின் நெடும்  புட்டில்
 - பொன் போல் ஒளிவீசுவதும், உள்ளே
ஆழ்ந்த  வடிவம் கொண்டதுமான, பெரிய அம்பு அறாத் துணிகளை;
புறத்து  வீ்க்கி  -  (தோள்களின்) புறத்தில் கட்டிக்கொண்டு; வன்தாள்
வயிரச்சிலை   வாங்கினன்
  -  வலிய  (இரு)  முனைகளை  உடைய
உறுதியான வில்லை எடுத்துக் கொண்டான்.
 

                                                  (15)
 

8017.

வயிரந் நெடு மால் வரை கொண்டு, மலர்க்கண் வந்தான்,
செயிர் ஒன்றும் உறா வகை, இந்திரற்கு என்று செய்த
உயர் வெஞ் சிலை; அச் சிலை பண்டு அவன் தன்னை
                                         ஓட்டி,
துயரின் தலை வைத்து, இவன் கொண்டது; தோற்றம்ஈதால்.