அச்சிலை - (இந்திரசித்தன் கையில் கொண்டிருந்த) அந்த வில்லானது; மலர்க்கண் வந்தான் - (மாலின் நாபித்) தாமரையில் தோன்றியவன் ஆகிய பிரமன்; செயிர் ஒன்றும் உறாவகை - துன்பம் ஒன்றும் ஒரு சிறிதும் உண்டாகாமல்; இந்திரற்கு என்று - ;இந்திரனுக்கு என்று; வயிரந் நெடுமால் வரை கொண்டு செய்த - வலிமையான பெரிய வச்சிரமலையைக் கொண்டு செய்த; உயர் வெஞ்சிலை - சிறந்த கொடிய வில்லாகும்; பண்டு - முன்பு; அவன் தன்னை துயரின் தலை வைத்து ஓட்டி - அந்த இந்திரனைத் துன்பத்துக்கு உள்ளாக்கித் தோற்று ஓடச் செய்து; இவன் கொண்டது - இந்த இந்திரசித்தன் (பறித்துக்) கைக்கொண்டதாகும்; தோற்றம் ஈதால் - (இவ்வில்லின்) வரலாறு இதுவேயாகும். | (16) | 8018. | தோளில் கணைப் புட்டிலும், இந்திரன் தோற்ற நாளே ஆளித் திறல் அன்னவன் கொண்டன; ஆழி ஏழும் மாள, புனல் வற்றினும் வாளி அறாத; வண்கண் கூளிக் கொடுங் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ.. | தோளில் கணைப்புட்டிலும் - (இந்திரசித்தன்) தோளில் கட்டியுள்ள அம்பு அறாத்தூணிகளும்; இந்திரன் தோற்ற நாளே - இந்திரன் தோற்றுத் தன்னிடம் சிறைப்பட்ட நாளில்; ஆளித்திறல் அன்னவன் கொண்டன - யாளியினைப் போன்ற வலிமையுடைய அத்தன்மையனான (இந்திரசித்தன்); கொண்டன - அவனிடம் பறித்துக் கொண்டவை ஆகும்; ஆழி ஏழும் மாள புனல் வற்றினும் - கடல்கள் ஏழும் இல்லை என்று கூறுமாறு (அவற்றின்) நீர் முழுதும் வற்றிவிட்டாலும்; வாளி அறாத - (எடுக்க எடுக்க) அம்புகள் குறையாத; வன்கண் கூளி - கொடிய கண்களை யுடைய பேய்களுக்கும்; கொடுங்கூற்றினுக்கும் - கொடிய யமனுக்கும்; ஆவது ஓர்கூடு போல்வ - பிணங்களையும் உயிரையும் உணவாக்கித் தருகின்ற ஒரு கூண்டைப் போன்றுள்ளன, | கணைப்புட்டில் - அம்பு அறாத்தூணி. ஆளி - யாளி, சிங்கம் போன்ற உடலமைப்பும் துதிக்கையும் உள்ள ஒரு மிருகம். திறல் - வலிமை. ஏழுகடல்கள் - உப்புநீர், கருப்பஞ்சாறு, கள், நெய், பால், தயிர், நன்னீர் ஆகியவை நிறைந்த கடல்கள். | (17) | 8019. | பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர் எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேரு |
|
|
|