| வில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மை அல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான். |
பண்டு தேவர் எல்லாரும் - முற்காலத்தில் தேவர்கள் எல்லோரும்; முனைத்தலை யாவரும் ஈந்த - போர்க்களத்தில் (இந்திர சித்தனுக்குத் தோற்றுக்) கொடுத்தவையும்; மேருவில்லாளன் கொடுத்த - மேருமலையை வில்லாகக் கொண்ட சிவபிரான் கொடுத்தவையும்; விரிஞ்சன் அளித்த - பிரமன் கொடுத்தவையும் (ஆகிய); வெம்மை அல்லால் புரியாதன - கொலைத் தொழில் அல்லது வேறு புரியாதனவுமாகிய; பல்லாயிரம் கோடி படைக்கலம் - பல்லாயிரம் கோடி என்னும் படியான (மிகப்பல) படைக்கலங்கள்; யாவையும் ஆய்ந்து கொண்டான் - எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுத்துக் கொண்டான். |
(18) |
8020. | நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப; மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது; வானுளோரும் தேறாதது-மற்று அவன் ஏறிய தெய்வ மாத் தேர். |
அவன் ஏறிய தெய்வ மாத்தேர் - அந்த இந்திர சித்தன் ஏறிய தெய்வத்தன்மை பொருந்திய பெரியதேர்; நூறாயிரம் யாளியின் நோன்மை தெரிந்த - நூறாயிரம் யாளிகளின் வலிமையைத் (தனித்தனியாகக்) கொண்ட; அன்னவை அவை ஆயிரம் ஏறாம் சீயத்து - அப்படிப்பட்ட தொகுதியாகிய ஆயிரம் ஆண்சிங்கங்கள்; பூண்டது என்ப - பூட்டப்பெற்றது;மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது - வேறாகிய ஓர் இலங்கையை ஒத்துள்ளது; வானுளோரும் தேறாதது - தேவர்களாலும் இத்தன்மையது என அறியப்படாதது. |
(19) |
8021. | பொன் சென்று அறியா உவணத் தனிப் புள்ளினுக்கும், மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும், மேல் நாள், பின் சென்றது அல்லது ஒரு பெருஞ் சிறப்பு உற்ற போதும், முன் சென்று அறியாதது, மூன்று உலகத்தினுள்ளும். |