பொன் சென்று அறியா - (அத்தேர் நிறத்தினால்) பொன்னும் உவமை என்று கூறமுடியாத; உவணத் தனிப்புள்ளினுக்கும் - கருடன் என்னும் ஒப்பற்ற பறவைக்கும்; மின்சென்று அறியா மழுவாளன் விடைக்கும் - மின்னலும் ஒப்பாகச் சென்று அறியாத மழுப்படையைக் (கையில்) ஏந்திய சிவபிரானது இடபத்துக்கும்; மேல்நாள் - முற்காலத்தில்; பின் சென்றது அல்லது - (அவைகள் தோற்றுப் போய் முன்னால் ஓடியபோது அவற்றைத் துரத்திக் கொண்டு பின்னால் சென்றதே அல்லாமல்; ஒரு பெருஞ்சிறப்பு உற்ற போதும் - ஒப்பற்ற (தன் வலிமை துணை வலிமை) முதலிய பெருஞ் சிறப்பைப் பெற்ற காலத்தில் கூட; மூன்று உலகத்தினுள்ளும் - மூன்று உலகங்களிலும்; முன் சென்று அறியாதது - தோல்வி அடைதலால் அவைகள் பின்னால் துரத்தி வரத்தான்தோற்று முன்சென்று அறியாதது. |
பொன் - பொன்வண்ணம், சென்று அறியா - நீங்காத, உவணன் - அழகிய சிறகுகளை உடையவன் என்று பொருள்படும். இவன் காசியபமுனிவரது மனைவியருள் விநதை என்பவளது மகன். சூரியனின் தேர்ப்பாகனான அருணனின் தம்பி. திருமாலின் வாகனமாய் இருப்பவன். இதனால் இவனுக்குப் பெரிய திருவடி என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெயர் உண்டு. |
(20) |
| 8022. | ‘ஏயாத் தனிப் போர் வலி காட்டிய இந்திரன்தன் சாயாப் பெருஞ் சாய் கெட, தாம்புகளால் தடந் தோள் போய் ஆர்த்தவன் வந்தனன், வந்தனன்’ என்று பூசல் பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடுங் கொடி பெற்றது அம்மா! |
ஏயாத் தனிப்போர் வலி காட்டிய இந்திரன் தன் - (அத்தேர்) ஒப்பில்லாத சிறந்த போர் வலிமையைக் காட்டிப் (போரிட்ட) இந்திரன் தன்னுடைய; சாயாப் பெருஞ்சாய் கெட - அழியாத பெரு வலிமை அழியும்படியாக; தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன் -கயிறுகளால் (மாயைப் பாசத்தால்) (அந்த இந்திரனுடைய) அகன்ற தோள்களைப் (போரில்) சென்று கட்டிய (வீரன்); வந்தனன் வந்தனன் என்று - வந்தான் வந்தான் என்று; பூசல் பேய் ஆர்த்து எழுந்து ஆடு - பேரொலியுடைய பேய்கள் |