பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 231

இரைத்து  எழுந்து  ஆடுகிற; நெடுங்கொடி பெற்றது அம்மா - பெரிய
கொடியைப் பெற்றது.
 

இந்திரனை     மாயைப்  பாசத்தால்  கட்டி  வென்ற  வீரனாகிய
இந்திரசித்தனது கொடி பேய்க் கொடி என்பது இப்பாடலால் தெரிகிறது.
 

                                                  (21)
 

8023.

செதுகைப் பெருந் தானவர் ஊனொடும் தேய்த்த நேமி-
யது;-’கைத் திசை யானையை ஓட்டியது’ என்னலாமே?-
மதுகைத் தடந் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகைத் தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது
                                      அம்மா!

 

செதுகைப் பெருந்தானவர் - (மேலும் அந்தத் தேர்) பொருதலைச்
செய்த  பெரிய  அசுரர்களுடைய;  ஊனொடும்  தேய்த்த நேமியது -
உடம்புகளைத்  (தேய்த்து) அழித்த சக்கரங்களை உடையது; மதுகைத்
தடந்தோள்  வலி  காட்டிய
 - வெற்றி பொருந்திய தன் பெருந்தோள்
வலிமையைக் காட்டிப் போர் செய்த; வானவேந்தன் முதுகைத் தழும்பு
ஆக்கியது
 - இந்திரனது முதுகில் தழும்பை உண்டாக்கிய; மொய் ஒளி
மொட்டது
 -  நிறைந்து  ஒளியுடைய மொட்டு என்ற (தேர் உறுப்பை)
உடையது; கைத்திசை யானையை ஓட்டியது என்னலாமோ அம்மா -
(இத்துணை   சிறப்புப்   பெற்றிருப்பதால்)   துதிக்கைகளை  உடைய
திசையானைகளை   வென்று  விரட்டியது  என்று  கூறுதல்(அதற்குச்
சிறப்போ?
 

வானவேந்தன்     முதுகைத்  தழும்பு  ஆக்கல்  -  இராவணனால்
வெல்லமுடியாத  இந்திரனை  இந்திரசித்தன்  வென்று  இலங்கைக்குக்
கொண்டு  போன போது, தேரின் மொட்டில் சேர்த்துக் கட்டிக்கொண்டு
போனதால்  ஏற்பட்ட  தழும்பு குறித்தது. மொட்டு - தாமரை வடிவில்
அமைந்து   தேரின்  முன்னால்  பொருத்தப்படும்  ஒரு  தேருறுப்பு.
இதனைக் “கொடிஞ்சி” என்ப.
 

                                                  (22)
 

8024.

அத் தேரினை ஏறியது ஒப்பன ஆயிரம் தேர்
ஒத்து ஏய்வன சேமமதாய் வர, ‘உள்ளம் வெம் போர்ப்
பித்து ஏறினன்’ என்ன, நடந்தனன்- பின்பு அலால், மற்று
எத் தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான்.