பக்கம் எண் :

234யுத்த காண்டம் 

வரவும்;     தானை  வீரப்பேர்  ஆழிமுகம்  செல  -  தரைப்படை
வீரர்களது   பெருங்கடல்   முன்னே   செல்லுமாறு;   சென்றனன்  -
சென்றான்.
 

                                                  (26)
 

           ‘வருபவன் யார்’ என் இலக்குவன் வீடணனை வினவல்
 

கலி விருத்தம்
 

8028.

நின்றனன் இலக்குவன், களத்தை நீங்கலன்-
‘பொன்றினன், இராவணன் புதல்வன்; போர்க்கு இனி,

அன்று அவன், அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன், வரும்’ என விரும்பும் சிந்தையான்.

 

இராவணன்     புதல்வன் பொன்றினன் - இராவணன் மகனாகிய
அதிகாயன்’  இறந்துவிட்டான்; இனி போர்க்கு - இனிமேல் போருக்கு;
அன்று   அவன்   -   சினம்  மிக்க  இராவணன்;  அல்லனேல்  -
அவனல்லன்  எனின்;  அமரர்  வேந்தனை  வென்றவன்  -  தேவர்
தலைவனை வென்றவன் ஆகிய இந்திர சித்தன்; வரும் என - (ஆகிய
இருவரின்   ஒருவர்)   வருவர்  என்று;  விரும்பும்  சிந்தையான்  -
ஆசையுடன்  (எதிர்பார்க்கும்)  மனதுடன்; இலக்குவன் - இலக்குவன்;
களத்தை   நீ்ங்கலன்   -   போர்க்களத்தை  விட்டு  நீங்காதவனாய்;
நின்றனன் - நின்றான்.
 

                                                  (27)
 

                                      வீடணன் விடை
 

8029.

‘யார், இவன் வருபவன்? இயம்புவாய்!’ என,
வீர வெந் தொழிலினான் வினவ, வீடணன்,

‘ஆரிய! இவன் இகல் அமரர் வேந்தனைப்

போர் கடந்தவன்; இன்று வலிது போர்’ என்றான்.

 

வீரவெந்தொழிலினான்     -  வீரக்  கொடுந்தொழிலை  உடைய
(இலக்குவன்); இவன் வருபவன் யார்? - (இதோ இங்கு) வருகின்றவன்
யார்  என்று;  (வீடணனைப்  பார்த்து)  இயம்புவாய்  - சொல்லுவாய்
என்று  கேட்க;  வீடணன் - (அதற்கு விடையாக) வீடணன்; ஆரிய -
ஆடவரில்  சிறந்தவனே;  இவன்  -  வருகின்ற இவன்; இகல் அமரர்
வேந்தனை
- போர் ஆற்றல் மிக்க தேவர்