தலைவனைப்; போர் கடந்தவன் - போரில் வஞ்சியாது எதிர் நின்று வென்றவன்; இன்று போர் வலிது என்றான் - இன்றைய போர் கடுமையானது என்று கூறினான். |
ஆரியன் - ஆடவர் திலகன், கடத்தல் - வஞ்சியாது எதிர் நின்று வெல்லல். ஆரிய - அண்மை விளி. |
(28) |
| 8030. | ‘எண்ணியது உணர்த்துவது உளது, ஒன்று-எம்பிரான்!- கண் அகன் பெரும் படைத் தலைவர் காத்திட, நண்ணின துணையொடும் பொருதல் நன்று; இது திண்ணிதின் உணர்தியால், தெளியும் சிந்தையால். |
எம்பிரான் - எமக்குத் தலைவனே (என்று வீடணன்) இலக்குவனை விளித்து); எண்ணியது ஒன்று - (நான்) எண்ணியதாகிய ஒன்றை; உணர்த்துவது உளது - உனக்குத் தெரிவிக்க வேண்டி உளது; கண் அகன் பெரும் படைத்தலைவர் காத்திட - (அது என்னவென்றால்) இடமகன்ற பெரிய படைக்குத் தலைவர்கள் (உனக்குத் துணையாகக்) காத்திட; நண்ணிய துணையொடும் - பொருந்திய துணைவர்களோடு; பொருதல் நன்று - (இந்த இந்திரசித்தனுடன்) போரிடுதல் நல்லது; இது - இக்கருத்தை; தெளியும் சிந்தையால் - ஆய்ந்து அறியும் மனத்தால்; திண்ணிதின் உணர்தியால் - உறுதியாக எண்ணிப் பார்ப்பாய். |
(29) |
| 8031. | ‘மாருதி, சாம்பவன், வானரேந்திரன், தாரை சேய், நீலன் என்று இனைய தன்மையார், வீரர், வந்து உடன் உற,-விமல!-நீ நெடும் போர் செயத் தகுதியால்-புகழின் பூணினாய்! |
விமல - குற்றம் அற்றவனே; புகழின் பூணினாய் - புகழை அணிகலனாக அணிந்தவனே; மாருதி - அனுமனும்; சாம்பவன் - கரடித் தலைவன் ஆகிய சாம்பவானும்; வானரேந்திரன் - குரங்குகளின் தலைவனாகிய சுக்ரீவனும்; தாரை சேய் - தாரையின் மகனாகிய அங்கதனும்; நீலன் - படைத்தலைவன் ஆகிய நீலனும்; என்று இனைய தன்மையார் - என்று கூறப்பட்ட இத்தகைய தன்மை உள்ளவர்களான; வீரர் உடன் வந்து உற - வீரர்கள் |