பக்கம் எண் :

236யுத்த காண்டம் 

உன்னுடன்     வந்து பொருந்த; நீ - நீ (இந்திரசித்தனுடன்); நெடும்
போர் செயத்தகுதியால்
- பெரும் போரை விளைவித்தல் தகுதியாகும்.
 

சாம்பவன்     - கரடித்தலைவன். பிரமன் கொட்டாவி விட்ட போது
பிரமனின்  அம்சமாகத்  தோன்றியவன்  என்பது  புராணச்  செய்தி.
வானரேந்திரன் - சுக்ரீவன்.
 

                                                  (30)
 

8032.

‘பல் பதினாயிரம் தேவர் பக்கமா,
எல்லை இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன்
ஒல்லையின் உடைந்தனன், உயிர் கொண்டு உய்ந்துளான்-
மல்லல் அம் தோளினாய்!-அமுதின் வன்மையால்.

 

மல்லல் அம் தோளினாய் - பெருமை மிகுந்த அழகிய தோள்களை
உடையவனே;  பல்பதினாயிரம்  தேவர்  - பல பதினாயிரக்கணக்கான
தேவர்கள்; பக்கமா - பக்க பலமாக வர;எல்லையில் சேனை கொண்டு
-  அளவில்லாத  படைகளைக்  கொண்டு; எதிர்ந்த இந்திரன் - (இந்த
இந்திரசித்தனை)   எதிர்த்த   இந்திரன்;  அமுதின்  வன்மையால்  -
அமுதம்   உண்டதன்   காரணமாக;   ஒல்லையில்  உடைந்தனன்  -
விரைவில்  தோற்றவனாகியும்  கூட;  உயிர் கொண்டு உய்ந்துளான் -
உயிரை விடாமல் கொண்டு தப்பிப் பிழைத்துள்ளான்.
 

                                                  (31)
 

8033.

‘இனி அவை மறையுமோ, இந்திரன் புயப்
பனி வரை உள நெடும் பாசப் பல் தழும்பு?
அனுமனைப் பிணித்துளன் ஆனபோது, இவன்
தனு மறை வித்தகம் தடுக்கற்பாலதோ?’

 

இந்திரன்   புயப்பனிவரை உள - இந்திரனுடைய தோள்களாகிய
பனிமலையில்  (இமயமலையில்)  உள்ள;  நெடும் பாசப் பல்தழுப்பு -
(இவன்   பிணித்ததால்   ஏற்பட்ட)  நீண்ட  (மாயைக்)  கயிற்றினால்
உண்டான  பல  தழும்புகள்;  இனி  அவை  மறையுமோ - இனிமேல்
மறைந்து  விடுமோ?  அனுமனைப் பிணித்துளன் ஆனபோது - (அது
மட்டும்    அல்லாமல்)    அனுமனையே    பிரமனது   கணையால்
கட்டியவனாக  இருக்கும்  போது; இவன் - இந்த இந்திரசித்தனுடைய;
தனுமறை  வித்தகம்  -  வில்பயிற்சியின் திறமை; தடுக்கற் பாலதோ -
(பகைவரால்) தடுத்தற்கு உரியதோ.