பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 3

மோதரன் - மகோதரன்; சிறுமை - துன்பம்.
 

                                                  (2)
 

“மருத்தனைச் சனகனாக உருமாற்றிக் காட்டுக” என மகோதரன் கூறுதல்.
 

7634.

‘உணர்த்துவென், இன்று நன்று; ஓர் உபாயத்தின் உறுதி
                                         மாயை
புணர்த்துவென், சீதை தானே புணர்வது ஓர் வினையம்
                                        போற்றி;
கணத்து, வன் சனகன்தன்னைக் கட்டினென் கொணர்ந்து
                                       காட்டின்-
மணத் தொழில் புரியும் அன்றே-மருத்தனை உருவம்
                                        மாற்றி?’

 

இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி உணர்த்துவென் - இன்றே
நல்லதாகிய   ஒப்பற்ற  உபாயத்தினால்  உனக்கு   உறுதியாவது  ஒரு
பொருள்   உணர்த்துவேன்;   சீதை   தானே   புணர்வது   மாயை
புணர்த்துவென்
 -  சீதை  தானே  வந்து  உன்னைச்  சேர்வதற்குரிய
மாயைச் செயலைச் செய்வேன்; ஓர் வினையம் போற்றி - ஒப்பில்லாத
வஞ்சனையைப்  போற்றிச்  செய்து;  மருத்தனை  உருவம்  மாற்றி -
மருத்தன்  என்னும்  அரக்கனைச் சனகனாக உருவம் மாற்றி;  கணத்து
வன் சனகன்   தன்னைக் கட்டி  கொணர்ந்து    காட்டின்
- ஒரு
நொடியில் அந்த  வலிய  மாயா  சனகனைக்  கட்டிக்     கொணர்ந்து
காட்டினால்; மணத்தொழில் புரியும் அன்றே - உன்னைத் திருமணம்
செய்யச் சீதை விரும்புவாள் அன்றே.
 

வினையம் - வஞ்சனை; கணத்து - நொடியில்.
 

                                                (3)
 

7635.

என அவன் உரைத்தலோடும், எழுந்து மார்பு இறுகப் புல்லி,
‘அனையவன்   தன்னைக்   கொண்டு   ஆங்கு  அணுகுதி,
                                   அன்ப!’ என்னா,
புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினன், எழுந்து
                                      போனான்,
வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல்
                                      காண்பான்.
 

என அவன் உரைத்தலோடும் - என்று அந்த மகோதரன் சொன்ன
அளவிலே; எழுந்து மார்பு இறுகப் புல்லி - இராவணன்