பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 367

முடி  மேல்  நிமிர்ந்து  முகிழ்  ஏறுகையன்  -  தலையின் மீது
உயர்ந்து குவிதல்  பொருந்திய  கைகளை உடையவனாய்; முகில் மேல்
நிமிர்ந்த  ஒளியான்
 -  கருமேகத்தினும்  மிக்க  நீல  நிறம் உடைய
(இராமனது);  அடிமேல்  விழுந்து   பணியாமல்  -   திருவடிகளில்
விழுந்து   (வெகுநாட்களாக)   விழுந்து  வணங்காமல்;  நின்ற  நிலை
உன்னி  உன்னி அழிவான்
 -  (அந்த  இராமன் துன்ப  வடிவமாய்)
நின்ற நிலையை  எண்ணி   எண்ணி   வருந்துபவனாய்;  கொடி மேல்
இருந்து
 -  (அவ்வவதார  மூலத்தின்)    கொடியின்  மீது   இருந்து;
இவ் உலகு ஏழொடு  ஏழு  தொழ  நின்ற  -  இந்தப்  பதினான்கு
உலகங்களும்    தன்னை    வணங்கும்   படி   நின்ற;    கோளும்
இலனாய்
  -   பெருமையும்      இல்லாதவனாய்;     படி  மேல்
எழுந்து வருவான்
 -   பூமியின்   மேல்    எழுந்து  வருபவனாகிய
கருடன்;  விரைந்து  -  வேகமாக (இராமன் இருக்கும்  இடம்)  வந்து;
நினைந்து  -   (அவனது  திருக்கல்யாண  குணங்களை)   நினைத்து;
பலகால் பணிவான்  - பலமுறை வணங்கி (அடுத்த பாடலில் முடியும்.)
 

                                                 (249)
 

                                                கருடன் துதி
 

8251.‘வந்தாய் மறைந்து; பிரிவால் வருந்தும்,
     மலர்மேல் அயன்தன் முதலோர்-
தம் தாதை தாதை இறைவா! பிறந்து
     விளையாடுகின்ற தனியோய்!
சிந்தாகுலங்கள் களைவாய்! தளர்ந்து
     துயர் கூரல் என்ன செயலோ?
எந்தாய்! வருந்தல்; உடையாய்! வருந்தல்’
     என, இன்னி பன்னி மொழிவான்:
 

மறைந்து   வந்தாய்  -  (நீ  நின்   திவ்யமங்கள  சொரூபத்தை)
மறைத்துக்கொண்டு; (சங்கற்ப  மாத்திரையாய் மானிடச்  சட்டை தாங்கி)
வந்தாய்; பிரிவால் வருந்து - உன் பிரிவினால் வருந்துகிற; மலர் மேல்
அயன்  தன்  முதலோர்  தம்
- மலரின் மேல் தாங்கி உள்ள அயன்
முதலியோருக்குக்  காரணன்  ஆன;  தாதை  தாதை  - பிதா மகனே;
இறைவா  -   எல்லாப்  பொருள்களிலும்   அந்தர்யாமியாய்த்   தங்கி
உள்ளவனே; பிறந்து விளையாடுகின்ற தனியோய் - (வினை வயத்தால்
அன்றிச்  சங்கல்பத்தால்)  பிறந்து  (மனித உருவத்துக்கு  ஏற்ப  நடித்து
விளையாடுகின்ற ஒப்பற்ற தலைவனை!   சிந்தா