குலங்கள் களைவாய் - சரணாகதி அடைந்தவர்களின் மனத் துன்பங்களைப் போக்குபவனே; தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ - நீயே மனம் தளர்ந்து துன்பம் மிகப்படுதல் என்ன செயலோ? எந்தாய் வருந்தல் - எனது தலைவனே வருந்தாதே; உடையாய் வருந்தல் - எப்பொருளையும் சரீரமாக உடையவனே வருந்தாதே; என இன்ன - என்று இத்தன்மையான சொற்கள் பலவற்றை; பன்னி மொழிவான் - திரும்பத் திரும்பக் கூறுபவனாயினான்,
|
கருடன் உண்மையை இராமனுக்குத் தெரிவித்துத் தேற்றுவது போல் பாடல்கள் அமைந்துள்ள தன்மையை உணர்ந்து கொள்க. இறைவன் மானிட உருத்தாங்கி வந்து மானுட இன்பதுன்பங்களை அனுபவித்து மானிட வெற்றியின் கொடுமுடியாய் உயர்வதை விளக்க வந்த கம்பர் இவ்வாறு தானே பாடமுடியும்.
|
(250)
|
| 8252. | ‘தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய் மூவாது எந் நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா! மேவாத இன்பம் அவை மேவி, மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய்! ஆவாய்! வருந்தி அழிவாய்கொல்!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்?
|
தேவாதி தேவர் - தேவர், பிரமன், உருத்திரன் முதலிய தலைமைத் தேவர்கள் போன்ற பலரும்; முந்து - ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு; திருநாமம் ஓது செயலோய் - நின் திருநாமத்தைச் சொல்லித் துதிக்கும் படியாக உள்ளவனே! மூவாது - மூப்படையாது; (இளமையுடன் இருந்து) எந்நாளும் - எப்பொழுதும்; உலகு ஏழொடு ஏழும் - பதினான்கு உலகங்களையும்; அரசாளும் மேன்மை முதல்வா - (பாதுகாத்து) அரசு செலுத்துகிற மேன்மை பொருந்திய தலைவனே; மேவாத இன்பம் அவை மேவி - (உன்னைச் சரண் புக்கவர்கள்) பிறரால் அடையமுடியாத பேரின்பங்களை அடைந்து; மேவ நெடு வீடு காட்டு அம் முடியாய் - (இறுதியில்) (உன்னை) அடைய முக்தி உலகத்தைக் காட்டும் (அழகிய முதல் தலைவனாய்); ஆவாய் - ஆனவனே; வருந்தி அழிவாய் கொல் - (இத்தகைய நீ) வருத்தம் |