பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 369

கொண்டு   அழிவாய்  போலும்  இவ்  அதிரேக  மாயை  -  இந்த
(உன்னுடைய)   மிகுதியான   மாயச்செயலை;  அறிவார்   யார்   -
அறியத்தக்கவர் யார்?
 

                                                 (251)
 

8253.‘எழுவாய், எவர்க்கும் முதல் ஆகி, ஈறொடு
     இடை ஆகி; எங்கும் உளையாய்,
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை;
     அவரால் வரங்கள் பெறுவாய்;
தொழுவாய், உணர்ச்சி தொடராத தன்மை
     உருவாய் மறைந்து, துயரால்
அழுவாய் ஒருத்தன் உளைபோலும்!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?
 

எவர்க்கும்  - எல்லா உலகங்களுக்கும்; முதல் ஆகி - படைக்கும்
முதல் காரணனாகியும்; ஈறொடு - அழிக்கும் காரணன் ஆகியும்; இடை
ஆகி
  -  காக்கும்  காரணன்  ஆகியும்; எழுவாய்  -  (சங்கர்ஷண
பிரத்தியும்ன,  அநிருத்தர்களாய்த்)  திருப்பாற்கடலில்   தோன்றுவாய்;
எங்கும்  உளையாய்  -  எல்லாப்  பொருள்களிலும் அந்தர்யாமியாய்
வியாபித்து  நின்று;  வழுவாது - தவறாமல்; எவர்க்கும் - உபாசிக்கும்
எல்லோருக்கும்; வரம்   ஈயவல்லை   -  (வேண்டிய)   வரங்களைக்
கொடுக்கும்  வல்லமை உடையவனே; உணர்ச்சி  தொடராத தன்மை
உருவாய்  மறைந்து
 -  இத்தகு (ஆற்றலை  உடைய நீ) முற்றுணர்வு
உண்டாகாத   தன்மை  உடைய  மனித  உருவில்  மறைந்து  நின்று;
தொழுவாய்  - (உன்னைத் தொழும் தேவர்களைத்) தொழுது நிற்பாய்;
அவரால்   வரங்கள் பெறுவாய்  -  அத்தேவர்களால்  (வேண்டிய)
வரங்களைப்  பெற்று  நிற்பாய்;  துயரால்  அழுவாய்  - துன்பத்தால்
(வருந்தி)   அழுவாய்;  ஒருத்தன்  உளை  போலும்  -  (இத்தகைய
வியத்தகு  நிலை  உடைய)  நீ ஒருவன் இருக்கின்றாய் போலும்;  இவ்
அதிரேக   மாயை
  -   இந்த   (உன்னுடைய)  மிகுதியான  மாயச்
செய்கையை; அறிவார் யார் - அறிபவர் யாவர்.
 
 

திருமாலின் வியூகமூர்த்திகளில் சங்கர்ஷணன் என்பவர் ஆமோதம்
என்னும்  இடத்தில்  ஞானம்,  பலம்  என்ற  இரண்டு குணங்களைத்
தம்மிடத்தில்   கொண்டு   அழித்தல்   தொழிலையும்  பிரத்யும்னன்
என்பவர்  பிரமோதம்  என்னும்  இடத்தில் ஐசுவரியம், வீரியம் என்ற
இரண்டு குணங்களைத் தம்மிடத்தில் கொண்டு