பக்கம் எண் :

 நாகபாசப் படலம் 371

(அவ்வாறு    எண்ணுபவர்   மனம்)    இருள்   உடையது   என்று
(அவர்களுக்கு)  விளக்கம் தராமல் நிற்பாய்; அந்நொப்பமே கொல் -
(இவ்வாறு  உன்  செய்கை  அறியப்படாமல்  இருப்பதற்குக் காரணம்)
அந்தப்  புத்தியின்  சிறுமையோ? பிறிதே  கொல் - (அல்லது) வேறு
ஏதாகிலும்  உளதோ?  இவ்  அதிரேக மாயை  - இந்த மிக்க மாயச்
செயலை; அறிவார் ஆர் - அறிபவர் யாவர்?
 
 

திருமால்  பிரத்யும்னனாய் இருந்து பிரமனைக் கொண்டு படைத்தல்
தொழிலையும்    சங்கர்ஷணனாயிருந்து   உருத்திரனைக்   கொண்டு
அழித்தல்  தொழிலையும் நடத்துகிறான் என்பதால் உன் ஒக்க வைத்த
இருவர் என்றார். நொப்பம் - நொய்ப்பம் - புத்தியின் சிறுமை.
 

                                                (253)
 

8255.‘வாணாள் அளித்தி, முடியாமல்; நீதி
     வழுவாமல் நிற்றி;-மறையோய்!
பேணாய், உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று;
     பெறுவான் அருத்தி பிழையாய்;
ஊண் ஆய், உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி;
     உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய்,
ஆண் ஆகி, மற்றும் அலி ஆதி!-ஆர், இவ்
     அதிரேக மாயை அறிவார்?
 

மறையோய்  - வேத வடிவானவனே; வாணாள் அளித்தி - உலகில்
உள்ள   உயிர்களுக்கு  எல்லாம்  (வினைக்குத்தக)   வாழும்  நாளைக்
கொடுக்கின்றாய்;   முடியாமல்  -  எக்காலத்திலும்  அழியாமல்;  நீதி
வழுவாமல் நிற்றி
 -  அறநெறி  தவறாமல்  நிற்கிறாய்; உனக்கு ஒரு
பொருள்  வேண்டும்  என்று பேணாய்
-  (குறைவிலா நிறைவாக நீ
இருப்பதால்)  உனக்கு  (வேறு  ஒரு)  பொருள்  வேண்டும் என்று (நீ)
விரும்புவதில்லை; பெறுவான்  அருத்தி  பிழையாய் - (உன்னடியார்)
பெறுவதற்கு விரும்பும் பொருள்களைத் தவறாமல்  கொடுப்பாய்; ஊண்
ஆய்
 -  நுகர்  பொருளாகவும்; உயிர்க்கு  உயிர் ஆகி - உயிருக்கு
உயிராகவும்; உணர்வு ஆய - ஐம்புல உணர்வுகளுக்கும் அரிய  ஆய;
பெண்ணின்  உரு ஆய்  - பெண்ணின் உருவாகியும்; ஆண் ஆகி -
ஆணின்  வடிவம் ஆகியும்; மற்றும் - அவையல்லாமல்; அலி ஆதி -
அலியின் வடிவமாகியும்; நிற்றி - நிற்கின்றாய்; இவ் அதிரேகமாயை -
இந்த மிக்க மாயச் செயலை; அறிவார் யார் - அறிபவர் யாவர்?