| அறம்தான் நிறுத்தல் அரிது ஆக!-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? | பிறவாமல் நல்கு பெரியோய் - (பத்துடை அடியவர்கள்) மற்றீண்டு வாராப் பிறவாத பெருநெறி தருகின்ற பெரியவனே! மறந்தாயும் ஒத்தி - (நீ) (உன் உண்மைத் தன்மையை) மறந்தவன் போலவும் காட்சி தருகிறாய்; மறவாயும் ஒத்தி - (அவதார நோக்கமாகிய பாவத்தை அழிக்க எண்ணியிருப்பதால்) உன் உண்மை நிலையை மறவாதவன் போலவும் இருக்கிறாய்; மயல் - (இத்தன்மையான உனது) மாயைச் செயலை; ஆரும் - (உலகத்தவர்) யாவரும்; யானும் - நானும்; அறியோம் - அறிய முடியாதவர்களாய் உள்ளோம்; துறந்தாயும் ஒத்தி - (பற்றற்று இருத்தலால்) துறந்தவன் போலவும் இருக்கிறாய்; துறவாயும் ஒத்தி - (தம்பி கட்டுண்டமை கண்டு வருந்தி அழுதலால்) துறவாதவன் போலவும் இருக்கிறாய்; ஒரு தன்மை சொல்ல அறியாய் - (இவ்வாறு இருத்தலினால்) ஒரு தன்மை உடையவன் என்று சொல்ல அரியவனாக விளங்குகிறாய்; பிறந்தாயும் ஒத்தி - (தசரதன் மதலையாய்த் தாரணி வந்ததால்) பிறந்தவன் போலவும் இருக்கிறாய்; பிறவாயும் ஒத்தி - (வினை வசத்தால் பிறவாமையின்) பிறவாதவன் போலவும் விளங்குகிறாய்; அறம் தான் நிறுத்தல் அரிது ஆக - அறத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தல் அருமை ஆக இருப்பதால் (அதனை நிலை நிறுத்த மானிடச் சட்டை தாங்கி வந்தவனே); இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள். | தன் சொரூபத்தை மறந்தும் மறவாதும், பிறந்தும் பிறவாதும் உள்ள இறை நிலை இப்பாடலில் விளக்கிக் கூறப்படுகிறது. திருமால் மனிதனாய் அவதரித்து மனிதனைப் போலவே இன்ப துன்பங்களுக்கு ஆட்பட்டமை கொண்டு இவ்வாறு கூறினார் என்க. | (258) | 8260. | ‘வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி; அவை எய்தி, என்றும் விளையா, நினைவர்க்கு, நெஞ்சின் உறு காமம் முற்றி, அறியாமை நிற்றி, மனமா; முனைவர்க்கும் ஒத்தி, அமரர்க்கும் ஒத்தி, முழு மூடர் என்னும் முதலோர் |
|
|
|