| அனைவர்க்கும் ஒத்தி, அறியாமை-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? |
வினைவர்க்கம் முற்றும் - (உயிர்களின் பாவ புண்ணியங்களாகிய) இருவினைகளின் தொகுதிகளுக்கு உரியபடி; உடனே படைத்தி - (அந்த உயிர்களை உடனே தக்க) உடல் எடுக்கச் செய்து படைக்கின்றாய்; அவை எய்தி - அந்த உடம்புகளை அடைந்து; நினைவர்க்கு - (உன் திருவடியையே) நினைக்கும் பக்தர்களுக்கு; என்றும் - எப்பொழுதும்; நெஞ்சின் உறுகாமம் முற்றி - (அவர்கள்) மனத்தில் உள்ள (எவ்வகை) விருப்பத்தையும் நிறைவேற்றி; அறியாமை நிற்றி - (அவர்கள்) அறியாமல் நிற்கின்றாய்; மனமா - மனமாகவும் (மறைந்துள்ளாய்); முனைவர்க்கும் ஒத்தி - முனிவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; அமரர்க்கும் ஒத்தி - தேவர்களுக்கும் ஒத்து விளங்குகிறாய்; முழுமூடர் என்னும் முதலோர் அனைவர்க்கும் - முழு அறிவிலிகள் என்னும் மற்ற பிறராகிய அனைவருக்கும்; அறியாமை ஒத்தி - அறிய முடியாத தன்மையால் ஒத்து விளங்குகிறாய்; இவ் அதிரேக மாயை - இந்த மிகுதியான மாயச் செயலை; ஆர் அறிவார் - யார் அறிவார்கள். |
மலத்தால் இலயித்த ஆன்மாக்களை வினைக்கேற்ப உடம்பு அருளிய இறைவன் உடம்பு எடுத்த ஆன்மாக்களின் ஈடேற்ற நினைப்பிற்கு ஏற்ப இருவினையை அழித்து முத்தி அளிக்கின்றான். எனினும் அவ்வான்மாக்கள் அச்செயலை வெளிப்பட உணர்ந்து கொள்ள முடிவதில்லை. என இறைத்தன்மையும் செயலும் கூறியபடி காண்க. |
(259) |
8261. | ‘எறிந்தாரும், ஏறுபடுவாரும், இன்ன பொருள் கண்டு இரங்குபவரும், செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது, உன்னது இடையே; பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி; பிறியாது நிற்றி; பெரியோய்! அறிந்தார் அறிந்த பொருள் ஆதி-ஆர், இவ் அதிரேக மாயை அறிவார்? |
பெரியோய் - பெரியவனே; எறிந்தாரும் - (படைக்கலங்களை) எறிபவர்களும்; ஏறு படுவாரும் - (அந்தப் படைக்கலங்களால்) காயம் படுபவர்களும்; இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் - |